23.3 C
New York
Thursday, July 25, 2024

Buy now

spot_img

ராகு – கேது தோஷம் ஏற்படுவது ஏன்?

ராகு – கேது தோஷம் ஏற்படுவது ஏன்?
********

வயதான பெண்களை சரியாக கவனிக்காமல் கொடுமைப்படுத்தினால் அவர்களின் தலைமுறைக்கு இராகு கேது தோஷம் ஏற்படுகிறது. இது குறிப்பிட்ட காலத்தில் திருமணம் நடைபெறாமல் தடுக்கவும், களத்திர ஸ்தானத்தில் ராகு ஜென்மத்தில் கேதுவாக மாறி கெடுதலைச் செய்கிறது.

கோவில் இடங்களை ஆக்கிரமித்து கடவுளின் கோபத்திற்கு ஆளானால் இந்த தோஷம் ஏற்படும்

தம்பதிகளை ஏதேனும் பகையால் பிரித்தால் அவர்களின் மூன்றாம் தலைமுறையினருக்கு இந்த தோஷம் ஏற்படலாம்.

மூதாதையர்கள் குழந்தைகளை கொடுமைப்படுத்தினாலோ அல்லது துன்புறுத்தினாலோ, அக்குழந்தைகளின் கண்ணீர் அவர்களின் தலைமுறைக்கு இராகு கேது தோஷமாக விஸ்வபரூபம் எடுக்கும்.

குடும்பங்களை பிரித்து வயதானவர்களிடம் சாபம் வாங்கியதினால் சாபம் நிறைவேற குடும்ப ஸ்தானத்தில் ராகுவும், அஷ்டத்தில் கேதுவுமாக இருந்து மூன்றாவது தலைமுறையினரது இல்வாழ்க்கையை நிம்மதி இல்லாமல் இந்த இராகு கேது கெடுக்கும்.

சகோதரர்களை மதிக்காமலும், உண்மை பாசத்தை உதறித்தள்ளி கைவிட்டாலோ அல்லது அவர்களை ஏமாற்றியதாலோ அவர்கள் இட்ட சாபம் ஒருவருக்கு மூன்றாவது வீட்டில் ராகுவும், தர்ம கர்மா ஸ்தானமாக 9-ம் வீட்டில் கேதுவும் இருக்கிறார்கள்.

நம்பிய நண்பர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து அவர்களின் சொத்தை அபகரித்தால் முன் ஜென்மத்தில் செய்தமைக்காக தற்போது ஆறாம் வீட்டில் ராகு அல்லது கேது அல்லது பன்னிரண்டாம் வீட்டில் ராகு அல்லது கேது இருக்கலாம்.

வேலை செய்தபோது கூலி கொடுக்காமல் ஏமாற்றினாலோ அல்லது மற்றவர்கள் வேலையை பறித்த பாவமும் சேர்ந்து ராகு-கேதுவாக மாறி ஜீவனஸ்தானத்தில் அமர்ந்து தொழிலில் முன்னுக்கு வர முடியாமல் ராகு 4-ல் அல்லது 10ல், கேது 4ல் அல்லது 10ல் அமர்ந்து தடுக்கின்றது.

சொத்துகளை ஏமாற்றிப் பறித்து பெற்ற தாயின் சாபத்தையும் முன் ஜென்மத்தில் அந்த அன்னை இட்ட கண்ணீர் ராகு கேது தோஷத்தை ஏற்படுத்துகிறது.

ராகு கேது தோஷம் ஏற்படுவது ஏன்?
************

கீழ்கண்ட பாவங்களை செய்தால்
இராகு – கேது தோஷங்கள் தோன்றி பல இன்னல்களை அனுபவிக்க வைக்கின்றது
************

சர்ப்ப தோஷம் !
*******

ராகு – கேது தோஷம் என்றாலும், கால சர்ப்ப தோஷம் என்றாலும் ஒன்றே ஆகும்.

அனைத்து கிரகங்களும் ராகு – கேதுவுக்கு இடையில் அமைந்து, ஜாதகத்தில் பாதி கட்டங்கள் காலியாக இருந்தால், அது பூரண கால சர்ப்ப தோஷமாகும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் இராகு, கேது பிடியில் இருந்து வெளியே இருக்கும் பட்சத்தில் அது கால சர்ப்ப தோஷம் ஆகாது. லக்னம், ஏழாம் வீடு தவிர மற்ற வீடுகளில் அமரும் ராகு – கேதுக்களைப் பொறுத்து சர்ப்ப தோஷம் பல வகைப்படும்.

அனந்த கால சர்ப்ப தோஷம் :

ராகு முதல் வீட்டிலும், கேது ஏழாம் வீட்டிலும் இருக்க, மற்ற கிரகங்கள் இவர்களுக்கிடையே அமைவதே அனந்த கால சர்ப்ப தோஷம். இதை விபரீத கால சர்ப்ப தோஷம் எனவும் கூறலாம். இவர்கள் பல இடையூறு, கஷ்டங்களுக்குப் பிறகு, தங்கள் சொந்த முயற்சியால் வாழ்க்கையில் முன்னுக்கு வருவர். எனினும் திருமணக் காலத்தில் சில இடையூறுகள் உண்டாகும்.

சங்கசூட சர்ப்ப தோஷம் :

ராகு 9-ஆம் வீட்டிலும், கேது 3-ஆம் வீட்டிலும் இருக்கும் ஜாதக அமைப்புடையோர் பொய் கூறுவர். முன்கோபியும்கூட, வாழ்க்கை ஏற்றத்தாழ்வு நிறைந்ததாக இருக்கும்.

கடக சர்ப்ப தோஷம் :

ராகு 10-ல் இருக்க, கேது 4-ல் இருந்தால் சட்ட சிக்கல்கள் வரும். அரசாங்கத் தண்டனை உண்டு. 10-ல் இருக்கும் ராகு இருட்டு சம்பந்தமான தொழிலைக் கொடுப்பர். புகைப்படம், எக்ஸ்ரே போன்ற தொழில் கிடைக்கும். ராகுவுக்கு இடம் கொடுத்த ராசியதிபதி கெட்டால், சட்டத்திற்கு புறம்பான வேலைகளைச் செய்யத் தூண்டுவார்.

குளிகை சர்ப்ப தோஷம் :

ராகு 2-ஆம் வீட்டிலும் கேது 8-ம் வீட்டிலும் இருந்தால் உடல் நலம் கெடும். இழப்புகள், விபத்துகள் நேரும். பொருளாதாரப் பாதுகாப்பற்ற நிலை ஏற்படும். ராகுவுக்கு இடம் கொடுத்த ராசியதிபதி பலம் பெற்றிருந்தால் வெளிநாட்டுப் பயணம் கிடைக்கும்.

வாசுகி சர்ப்ப தோஷம் :

ராகு 3-ம் வீட்டிலும் கேது 9-ம் வீட்டிலும் இருந்தால் இந்த தோஷம் ஏற்படும். தொழிலில் பிரச்சனை ஏற்படும். காது மற்றும் இளைய சகோதரர்களால் பிரச்சனைகள் உருவாகும்.

சங்கல்ப சர்ப்ப தோஷம் :

ராகு 4-ல், கேது 10-ல் இருந்தால் ஜாதகரின் வேலை, தொழில் கெடும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவைப்படும்.

பத்ம சர்ப்ப தோஷம் :

ராகு 5-ம் வீடு, கேது 11-ஆம் வீட்டில் இருந்தால் குழந்தைகள் பிறப்பதில் பிரச்சனை ஏற்படும். இதனுடன் சந்திரன் கெட்டால் ஆவித் தொல்லை ஏற்படும். மேலும் நண்பர்களால் ஏமாற்றமும், நோய் உண்டானால் குணமடைய தாமதம் ஆகும்.

மகா பத்ம சர்ப்ப தோஷம் :

ராகு 6-ல், கேது 12-ல் இருந்தால் நோயினால் தொல்லை உண்டாகும். எதிர்காலம் இடையூறுகள் நிறைந்ததாக இருக்கும். 6-ம் அதிபதியை பொறுத்து நோய் குணமாகுதலும், எதிரிகளை வெற்றி கொள்ளுதலும் நடக்கும்.

தக்ஷக சர்ப்ப தோஷம் :

கேது லக்னத்தில், ராகு 7-ல் இருந்தால் முன்யோசனையும், யூகம் செய்யும் ஆற்றலும் உடையவர். தன் செல்வத்தை மது, மாதில் இழப்பார். திருமண வாழ்வில் தொல்லை ஏற்படும்.

கார்கோடக சர்ப்ப தோஷம் :

ராகு 8-ல், கேது 2-ல் இருந்தால் கார்கோடக சர்ப்ப தோஷத்தை உண்டாக்கும். தந்தையின் சொத்து கிடைக்காது. எதிரிகள் அதிகமாக இருப்பர்.

விஷ்தார சர்ப்ப தோஷம் :

ராகு 11-ல், கேது 5-ல் இருந்தால் குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளை உண்டாக்கும். அடிக்கடி பயணம் செய்வார். வாழ்க்கையின் பிற்பகுதி நன்றாக இருக்கும்.

சேஷநாக சர்ப்ப தோஷம் :

ராகு 12-ல், கேது 6-ல் இருந்தால் உடல் நலத்தில் பிரச்சனைகள் ஏற்படும். வழக்குகளில் சிக்கல் உண்டாகும். எதிரிகள் தொல்லை அதிகரிக்கும்.

இராகு – கேது பரிகார முறைகள்..!
************

இராகு – கேது தோஷம் உடையவர்கள் சனிக்கிழமை தோறும் அவரவர் வீட்டில் அமைந்துள்ள அம்மியின் குழவியை மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு பூஜை அறையில் வைத்து தீப நைவேத்தியம் செய்து, பின்பு தென்மேற்கு திசையை நோக்கி உட்கார்ந்து குடும்பத்தில் உள்ள முதிய வயதுடையவர்களை வரவழைத்து அந்த அம்மிக் குழவியை எடுத்து ஆலம் சுற்றி திருஷ்டி கழிக்க வேண்டும். இவ்வாறு மூன்று முறை அல்லது ஒன்பது முறை செய்து வருவோமேயானால் நலம் பயக்கும்.

மேலும் இராகு தோஷம் உடையவர்கள் இராகு காலத்தில் அருகம் புல்லை உலர்த்தி யாக குண்டத்தில் நெய் இட்டு தீயெழுப்பி அதில் உளுந்து மாவும் – நெய்யும் கலந்து ஒன்பது சிறு உருண்டைகளை ஒன்றன் பின் ஒன்றாக இடவேண்டும். யாகம் என்கிற போது வேத விற்பன்னரைக் கொண்டு செய்தல் என்கிற அவசியம் இன்றி நாமே செய்து கொள்ளலாம். இவ்வாறு யாகத்தில் உருண்டைகளைப் போடுகிற போது இராகு தோஷத்திற்கு இராகு கவசம் அல்லது இராகு மந்திரம் சொல்லித் துதிக்கலாம்.

மேலும் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருநாகேஸ்வரம் எனும் இராகு ஸ்தலத்திற்கு சென்று பால் அபிஷேகம் செய்து வரலாம். இதனின்றி காளஹஸ்திக்குச் சென்று வழிபட்டு, பரிகாரம் செய்து வருவதும் மிகச் சிறப்பானதாகும்.

கேது தோஷம் உடையவர்கள் தர்பையை உலர்த்தியாக குண்டத்தில் நெய் இட்டு தீ எழுப்பி கொள்ளு மாவில் நெய் கலந்து ஒன்பது சிறு உருண்டைகளாக ஒன்றன் பின் ஒன்றாக இட்டு பூஜை செய்யலாம். இதனை எமகண்ட நேரத்தில் செய்வது சிறப்பாகும்.

மேலும் கீழப்பெரும்பள்ளம் எனும் கேது ஸ்தலத்திற்கு சென்று அங்கு எழுந்தருளியுள்ள பகவானைத் தரிசித்து வரலாம்

ராகு கேது தோஷம் நீக்கும் பரிகாரத் தலங்கள்.
****************

சிதம்பரம் நடராஜர் ஆலயம், சிவகாமசுந்தரியின் சந்நிதியில் உள்ள சித்திரகுப்தரை திங்கட்கிழமை எமகண்ட வேளையில் வணங்கினால் கேது தோஷம் நீங்கும்.

நாகர்கோவில், நாகநாதர் ஆலயத்தில் மூலவரே நாகர்தான். கருவறையின் ஓலை விதானத்தில் எப்போதும் ஒரு நாகம் காவல் காக்கிறது என்பது ஐதீகம். இங்குள்ள இரண்டு அரச மரங்களை வலம் வந்து நாகராஜனையும், நாகராணி என்ற துர்க்கையையும் வழிபட, ராகு-கேது தோஷங்கள் நீங்குகின்றன.

திருநெல்வேலியில் கார்க்கோடகன் என்று அழைக்கப்படும் ராகு-கேது தலம் அமைந்திருக்கிறது. இங்கு ஸ்ரீநிவாசப் பெருமாள் ராகு-கேது அம்சமாகத் திகழ்கிறார். இவருக்கு அமிர்தகலசம் செய்து நிவேதித்தால் ராகு-கேது தோஷங்கள் நீங்கும்.

நெல்லை மாவட்டத்தில் உள்ளது சங்கரநாராயணர் ஆலயம். இங்கு அருளும் கோமதியம்மன் சந்நிதியின் புற்றுமண் தீரா நோய் தீர்க்கும் மாமருந்து. வீடுகளில் விஷ பூச்சிகள் வராமல் இருக்க வெள்ளியினாலான பாம்பு, தேள் போன்ற உருவங்களை உண்டியலில் செலுத்துகிறார்கள். இவ்வாறு செலுத்தினால் நாகதோஷம் நீங்கப்பெறுவர்.

ராமநாதபுரம், பரமக்குடியிலிருந்து 19 கி.மீ தொலைவில் உள்ளது நயினார் கோயில். இங்குள்ள இறைவன் -நாகநாதர். ஆதிசேஷனும் அஷ்ட நாகங்களும் வழிபட்ட மூர்த்தி இவர். ராகு-கேது தோஷங்கள் நீங்க இங்குள்ள வாசுகி தீர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்கினால் தோஷங்கள் நீங்குகின்றன.

ராகு கேது தோஷங்கள் வெக்காளியம்மன் ஆலயத்திலும் சிறந்த முறையில் நிவர்த்தி செய்யப் படும்
தொடர்பு கொள்ளவும்

🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
என்றும் இறைப்பணியில்
வெக்காளிமுரளி
மகாவெக்காளி ஜோதிடம்
மற்றும் பரிகார மையம்
வெக்காளியம்மன் கோவில்
சந்திராபுரம் பெரியபாளையம் அருகில்
திருவள்ளூர் மாவட்டம் 601102
தமிழ்நாடு இந்தியா
9894770473
வாட்சப் எண்கள்
9894770473
EMAIL ID
Vekkalimurali1976@gmail.com

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!