புலிப்பாணி கருத்துக்கள் சில 👇
1. 10 ம் அதிபதி 4ல் ஏற லக்னாதிபதி 2, 5, 9 ல் இருக்க பிறந்தவனுக்கு புதையல் கிட்டும். அதை வைத்து அன்னச்சத்திரம் கட்டி பலருக்கு அன்னதானம் போடுவான்.
நல்ல வண்டி வாகன யோகமுண்டு. நல்ல யோகம் உள்ளவன்.
2. சனி 6 9 ல் இருக்க ஜாதகன் பாக்கியவான்.
சிறந்த மேடைப் பேச்சாளன். கவிஞன்
மற்ற இடங்களில் இவர்கள் ஒன்று சேர்ந்து இருந்தால் வினோதகன், அதாவது கோமாளி வேடம் தரித்து மக்களை மகிழ்விப்பவன்
3. 6க்கு உடையவர் கேந்திர கோணம் ஏற.
A. அரசு தோஷம் அரசாங்க தண்டனை
B. திருட்டு பயம். திருட்டு போவதால் துன்பம். குடும்பத்தில் களவு போகுதல்
C. மனைவி வீட்டுப் பிரச்சனையை வீதிக்கு கொண்டு வருவாள்
D. விஷபயம், வெடியால் துன்பம்
4. 6 ல் ராகு 12ல் கேது குரு கேந்திரத்தில் இருந்தால் லட்சுமி யோகம்.
பூதகணங்களுக்கு பலி கொடுத்து புதைக்கப் பட்ட பொருள்களை வெளியே எடுத்து சீமானாக வாழ்வான்
5. குரு சுக்கிரன் சந்திரன் 5ல் இருந்தால் எல்லா நலன்களுடன் சிறப்பாக வாழ்வான்.
குரு மட்டும், புத்திரர்கள் அற்பம்
சந்திரன் மட்டும் , பெண் குழந்தைகள்
சுக்கிரன் இருந்தால் நல்ல யோகம்
6. சூரியனுக்கு முன்னாள் புதன் இருந்தால் புனிதமானவன் ஆனால் தரித்திரமுள்ளவன்
சூரியனுக்கு பின்னால் புதன் இருந்தால் நல்ல பெயர் புகழ் தனமும் உள்ளவன்.
சூரியனுக்கு பின்னால் செவ்வாய் அனேக புத்திரர்.
சூரியனுக்கு பின்னால் குரு சனி – முடவன் செவிடன்.
7. தனாதிபதி தனக்காரகன் 10 11 அதிபதிகள் ஆகிய நால்வரும் பரிவர்தனையானால் தனம் குவியும், நல்ல பெயர் கிட்டும், வாகனம் உள்ளவன்
ஆனால் இவர்கள் பகை கிரகத்துடன் சேர்ந்து கெட்டால் தெருவில் பிச்சையெடுக்கும் அவல நிலை.