பஞ்சாங்கமும் – பஞ்ச பூதமும்..!!!
கிழமைக்கு நாதன் செவ்வாய்.
திதிக்கு நாதன் சுக்கிரன்
யோகத்துக்கு நாதன் குரு.
கரணத்துக்கு நாதன் சனி
நட்சத்திரத்துக்கு நாதன் புதன்
ஏன் இப்படி முன்னோர்கள் வகுத்து இருக்கிறார்கள் என்றால் கிழமை என்பது அக்னியின் தத்துவத்தை கொண்டது….
எனவே வாரம் என்பது அக்னி சார்ந்த விஷயம்.
திதி என்பது நீர் சார்ந்த விஷயம்…
அதனால்தான் அதற்கு அதிபதி சுக்கிரன்…
சுக்கிரன் இந்த லௌகீக வாழ்வுக்கு தேவையான அனைத்தையும் கொடுப்பவர்.
எனவேதான் ஒருவருடைய ஆசையை பற்றியும் பொருளாதாரத்தை பற்றியும் திதியை கொண்டு அறியலாம் என உரைக்கப்பட்டது.
யோகம் என்பது ஆகாயம் சார்ந்த விஷயம்..
இதற்க்கு குரு தான் நாதன் …
அனைவரையும் ஒருங்கிணைப்பவர்….
இணைத்தல் என்பது யோகத்தின் வேலை .
நட்சத்திரம் என்பது நிலம் சார்ந்த விஷயம்.
கரணம் என்பது காற்று சார்ந்த விஷயம்.
இதில் மனிதன் தொங்கி கொண்டு இருப்பது காற்றை சார்ந்துதான்…
புரியும் என்று நினைக்கிறேன்..!!..
அதனால்தான் கரணத்தை பிடி…காரியம் முடி என நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்..!!!..