ரேவதி நட்சத்திரத்தை பற்றிய பொதுவான பலன்
1. பேசுவதற்கும் பழகுவதற்கும் இனிமையானவர்கள்.
2. எல்லோருக்கும் நல்லவராக இருக்க வேண்டும் என்கிற நினைப்பு இருக்கும்.
3. சகோதர சகோதரிகள் தன் சொத்தையும் விட்டுக் கொடுப்பார்.
4. இந்த நட்சத்திர காரர்களை எல்லோரும் மதிப்பு மிக்கவராகவும், கௌரவம் மிக்கவர்களாக பார்க்க வேண்டும் அல்லது மதிப்பிட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இவர்களிடம் உண்டு.
5.சூழ்நிலைக்கு ஏற்றார்போல் இடத்திற்கு தகுந்தாற்போல் தன்னை மாற்றிக் கொண்டு செயல்படுவதில் வல்லவர்கள்.
6. அனைத்தையும் கற்று உணர வேண்டும் என்கிற ஆர்வம் அவர்களிடம் நிறைய உண்டு.
7. மிகச் சிறந்த ஆலோசகராக இருப்பார்.
8.அடுத்தவர்கள் பிரச்சனையை பொறுமையாக கேட்டு அதற்கு தகுந்த அறிவுரை கூறுவார்.
9. இவர்களிடம் உள்ள ஒரு சிறந்த விஷயம் மற்றவர்களை சிறப்பாக எடை போடுவார்.
10. எல்லாம் வர்க்கத்தை சார்ந்தவர்களும் இந்த நட்சத்திரக்காரர்கள் இடம் தொடர்பில் இருப்பார்கள்.
11.இவர்கள் வெளிப்படுத்தக்கூடிய ஒவ்வொரு செயலும் வித்தியாசமாகவும் தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதை விரும்புவார்.
12. எல்லோருடனும் நன்றாக பேசுவார், பழகுவார், நம்புவார் ஆனால் ஒரு சின்ன சந்தேகம் அவர்களை பற்றி இருக்கும் மற்றும், மாற்றுக் யோசனையும் இவர்கள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும்.
13. இவர்களிடம் சந்தேக குணமும் உண்டு.
14. இவர்களிடம் பாசிட்டிவ் எனர்ஜி, அதிகம் உண்டு.
14. பெரும்பாலும் இவர்களுக்கு இரண்டு பெயர் இருக்கும். கூப்பிடுவதற்கு ஒரு பெயர் ரெக்கார்டில் ஒரு பெயர்.
15. பார்ப்பதற்கு அழகாகவும், எளிமையான தோற்றம், சகஜமான பேச்சு, மன தைரியம் அதிகம், படித்தவர்கள், புதுமை விரும்பி.
16. அம்மாவைவிட அப்பாவின் மேல் அதிக அன்பு பாசம், ஆனால் தந்தையை விட்டுப் பிரிந்து வாழ்வார்கள்.
17. சில இடங்களில் இவர்கள் கழுவுகிற மீனில் நழுவுகிற மீன்.
18. இவர்களது திருமண வாழ்க்கை சற்று சுகம் குறைவாக இருக்கும், ஆனால் வெளியே காட்டி கொள்ள மாட்டார்கள் ஏனென்றால், அந்த சூழலுக்கு ஏற்றாற்போல் செயல்படக் கூடியவர்கள் இவர்கள்.
19. எளிதில் ஏமாற மாட்டார்கள், அப்படியே இவர்கள் ஏமாந்தாலும், ஏமாற்றியவர்களை விடமாட்டார்கள், தனக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவார்.
20. மனதில் ஆயிரம் கவலைகள் இருந்தாலும், சற்று கூட வெளியில் காட்டிக் கொள்ளாமல், அந்த உதட்டில் புன்னகையுடன் பேசுவார்கள்.
21. இந்த நட்சத்திரக்காரர்கள் பிராக்டிகலாக, மிகவும் எதார்த்தமாக யோசிக்க கூடியவர்கள்.
22. இவர்கள் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்வார், சமாளிப்பது கைவந்த கலை.
23. இவர்கள் முதலீடு போட்டு தொழில் செய்தாலும், இவர்களது எண்ணம் முதலீட்டை சீக்கிரமாக சம்பாதித்து திரும்பி எடுக்க வேண்டும் என்கிற சிந்தனை இவர்களுக்கு அதிகம்.
24.எச்சரிக்கை உணர்வு அதிகமாக இருப்பதால் அதிகமாக ரிஸ்க் எடுக்க மாட்டார், அப்படியே அதில் பிரச்சனை வந்தாலும் மிகவும் சாமர்த்தியமாக அதை எதிர் கொள்வார்.
25.சில நேரங்களில் இவர்களது மென்மையான குணத்தால் பாவம் புண்ணியம் பார்த்து பணம் இழப்பு ஏற்பட்டிருக்கும்.
26. சளித் தொல்லை, நரம்பு தளர்ச்சி, கல்லீரல் பாதிப்பு, அஸ்மா, போன்ற தொந்தரவுகள் உண்டு.
27. இந்த நட்சத்திரக்காரர்கள் தனக்கு சரி என்று மனதிற்கு பட்டு விட்டால், அதை எந்த எதிர்ப்பு வந்தாலும் எதிர்கொண்டு செயல்படுத்துவார்.
28. எப்பொழுதும் இவர்கள் கையில் காசு, இருப்பு இருந்து கொண்டே இருக்கும்.
29.இந்த நட்சத்திரக்காரர்களுக்கு எந்த இடத்தில் எதை பேசணும் எதை மனறக்கணும் என்பது நன்றாக தெரியும்.
30. தேவையற்ற விஷயத்தை பேசி நேரத்தை வீணாக்க மாட்டார்கள்.
31. பேச்சு இவர்களுக்கு மூலதனமாக இருக்கும், சிறந்த ஆசிரியர்களாகவும், ஆலோசகராகவும், இருப்பார்.
32.சமூகத்தில் தனக்கென்று ஒரு முத்திரையைப் பதித்துக் கொண்டு வாழ்வார்கள்.
33. தான் உண்டு தன் வேலை உண்டு பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை புரிந்து உணர்ந்து செயல்படுவர்.
34.இவர்களுக்கு என்று ஒரு கொள்கை வைத்துக் கொண்டு அந்த வட்டத்திற்குள் இவர்கள் சாமர்த்தியமாக செயல்படுவார்.
35.நெற்றியை சுருக்கிக் கொண்டு ஏதாவது யோசித்துக் கொண்டே இருப்பார், நகத்தைக் கடிக்கும் பழக்கம் உண்டு.
36. இவர்களுக்கு நல்ல மனநிலை இருந்தால், இவர்களுடைய வெளிப்பாடு சிறப்பு மிக்கவையாக இருக்கும்,(ஜிமிக்கி கம்மல் பாட்டை போட்டு ஆடுவார்கள்) ஏதாவது ஒரு நாள் மனநிலை(mood) சற்று சரி இல்லை என்றால்( mood). போடா போடா புண்ணாக்கு என்று சோம்பேறித்தனமாக செயல்பட்டு படுத்து தூங்கி விடுவார்கள்.
37. பகலைவிட இரவில் கண்விழித்து வேலை செய்வது இவர்களுக்கு பிடிக்கும்.
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
ராமசுப்பிரமணியம் ஈரோடு
ஜோதிட மாணவன்.
🙏🌹🙏🌹🌹🌹🙏🌹
(மேலே சொல்லப்பட்டுள்ள அனைத்து பலன்களும் பொதுவானவை)🙏🌹🙏🌹🌹🌹🙏🌹🌹