இயற்கை என்ற இறைவனை வணங்கி ….
அனைத்து குருமார்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் எனது பணிவான வணக்கங்கள்
🤝அனைவருக்கும்
நண்பர்கள்
தின நல்வாழ்த்துக்கள்
🤝நண்பர்கள் என்றதும்
நம் நினைவுக்கு வருவது கண்ணன் குசேலன் நட்பு
அதியமான் ஔவையார் நட்பு
கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பு
இன்னும் பல நண்பர்கள் இருந்தாலும் இதில் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்த துரியோதனன் கர்ணனின் நட்பு எப்படிப்பட்டது என்று
ஒரு சிறு பதிவு
பாண்டவர்கள் தன் உடன்பிறந்த சகோதரர்கள் என்று தெரிந்தும்
தன் நண்பனுக்காக அவர்களுக்கு எதிராக போரிட்ட கர்ணனின் நட்பு ….
இந்த அளவுக்கு கர்ணன் துரியோதனன் மீது அன்பு வைக்க பல காரணங்கள் இருந்தாலும் அதில் ஒன்று உங்கள் பார்வைக்கு
ஒரு சமயம் துரியோதனன் மனைவியும் கர்ணனும் பகடை விளையாடிக் கொண்டிருந்த சமயம்
துரியோதனின் மனைவி வாசலுக்கு நீராகவும் கர்ணன் அதற்கு எதிர்ப்புறத்தில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்
துரியோதனன் மனைவி தோற்கும் தருவாயில் திடீரென்று துரியோதனன் வருவதை கண்டார் துரியோதனன் மனைவி அவரை பார்த்ததும் சட்டென்று எழுந்தார்
உடனே கர்ணன் விளையாட்டை பாதியில் விட்டு எங்கு செல்கிறாய்….. என கையை பிடிக்க
அது அவரது இடுப்பில் தெரியாமல் பட்டு இடுப்பில் கட்டியிருந்த முத்துமாலை அவிழ்ந்து முத்துக்கள் சிதறியது
இதைக் கண்ட துரியோதனன் எந்த பதற்றமும் இல்லாமல் முத்துக்களை எடுக்கவா கோர்க்கவா என்று சிரித்தபடி உள்ளே வந்தார்
கர்ணனுக்கும் துரியோதனன் மனைவிக்கும்
உடல் நடுங்க…
எந்த பதற்றமும் இல்லாத துரியோதன்
தன்னுடைய சிந்தனை
மிகவும் தெளிவாக இருக்கிறது
வழுவழுப்பான முத்துக்களை எடுக்கும் அளவிற்கு
எனது மனம் தெளிவாக இருக்கிறது
என்று அவர்களுக்கு உணர்த்தவே
முத்துக்களை எடுக்கவா கோர்க்கவா என்று சொல்லாமல் சொன்னார்
அந்த காலகட்டத்தில் இதுபோன்ற விஷயங்கள் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும்
ஆனால்
அதை எள்ளளவும் நினைக்காத துரியோதனன்
கர்ணன் மீது கொண்ட நட்பு எந்த அளவுக்கு பெரிது என்று கர்ணன் உணர்ந்த சமயம் அது
இந்த அளவு நம்பிக்கை
வைத்த
எனது நண்பனுடன் தான் சாகும் வரை இருக்க வேண்டும் என்று
அன்றே முடிவு செய்தார்
கர்ணன் அதனால் தான் தனது தாய் குந்தி பாண்டவர்களுக்கு துணையாக போர்புரிய அழைத்தும்
ஐவரோடு ஆறாக வந்தாலும் சாவு வரும்
நூறு பேருடன் இருந்தாலும் சாவு வரும்
அதாவது ஆறிலும் சாவு நூறிலும் சாவு
ஆனால்
நட்பு நிலையானது என்று
தனது தாய்
குந்திக்கு பதிலுரைத்தார் கர்ணன்
மீண்டும் உங்களை சந்திக்கும் வரை நன்றிகளுடன் உங்கள் தோழி
💐💐💐💐💐💐💐💐💐