ஜோதிடம் ஏன் பொய்த்துப் போகிறது என்பதற்கான காரணங்கள்
1 முதலில் நாம் கிரகங்களுக்கு இயற்கையான ஒளி கொடுக்கும் சக்தி இல்லை என்பதை தெள்ளத் தெளிவாக நம் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்
2 நவ கிரகங்களில் முக்கியமாக சூரியனுக்கு ஒளி இருக்கிறது என்பதும் சூரியனிடமிருந்து மற்ற கிரகங்கள் தான் ஒளியைப் பெற்று பிரதிபலிக்கிறது என்பதையும் நாம் தெள்ளத் தெளிவாக மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்
3 உதாரணமாக கடக லக்னம் கடக லக்னத்தில் குரு பகவான் உச்சம் பெற்று இருக்கிறார் என்றால் உச்சம் பெற்ற கிரகம் உச்சமாக நல்ல பலன்களைக் கொடுக்கும் என்பதையும் நாம் எல்லோரும் படித்துப் படித்து ஏமாந்து போகிறோம் ஏனென்றால் குருபகவான் என்கின்ற கிரகம் உச்சம் அடையும் ராசி என்பதை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் ஆனால் குரு பகவானுக்கு சுயமாக ஒளி கொடுக்கும் தன்மை இல்லை ஆகவே நாம் எங்கு எந்த நட்சத்திரத்தில் அவர் உச்சம் பெறுகிறார் எந்த அளவில் அவர் உச்சம் பெறுகிறார் என்று பார்த்து அந்த கிரகத்தின் தன்மையை தேர்ந்தெடுத்து பின்பு நாம் பலன் கூற வேண்டுமே தவிர அதைத் தவிர்த்து குரு உச்சம் பெற்று விட்டார் என்று நாம் பலன் சொல்லி கொண்டு இருந்தாள் ஜோதிடத்தில் நம்மைப் போல் யாரும் பெரிய முட்டாள்கள் இல்லை ஏனென்றால் குரு என்ற கிரகத்திற்கு சுயமாக ஒளியைக் கொடுக்கும் தன்மை இல்லை இது இரண்டு வகையான ஒளியை பெற்றுக் கொள்கின்றது ஒன்று சூரியனிடமிருந்து மற்றொன்று நட்சத்திரங்களில் இருந்து
உதாரணமாக
கடக லக்கினமாக இருந்து குருபகவான் கடகத்தில் ஆயில்யம் 4-ஆம் பாதத்தில் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம் இதன் பலனை நாம் எப்படி தெரிந்து கொள்வது முதலில் நாம் புதன் அவருடைய ஜாதகத்தில் எந்த நிலையில் இருக்கிறார் என்பதை நாம் குறித்துக்கொள்ள வேண்டும் பின்பு சூரியன் எந்த நிலையில் இருக்கிறார் என்பதையும் நாம் குறித்துக்கொள்ள வேண்டும் பின்பு இந்த குரு பகவானை எத்தனை கிரகங்கள் பார்க்கின்றது என்கின்ற அளவீடுகளையும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் அதன்பின்பு சூரியனையும் புதனையும் மற்ற கிரகங்களையும் ஆய்வு செய்து அந்தப் பலனை நிர்ணயம் செய்து எடுத்து வைத்துக்கொண்டு நீங்கள் பலன் சொல்லிப் பாருங்கள் அசந்து விடுவீர்கள் நவாம்சத்தில் கிரகங்களின் நிலையை பற்றி நீங்கள் தெரிந்து கொண்டு அந்த குணத்திற்கு ஏற்ப நீங்கள் பலனை நிர்ணயம் செய்யுங்கள் பலன் சொல்வதில் வெற்றியடையலாம் மிக்க நன்றி
என்றும் அன்புடன் பூ.சி பெரியசாமி ஐயா ஜோதிடர் கோவை