கிருஷ்ணாவதாரம் ..சூட்சமங்கள் .சில
🍁விஷ்ணுவின் அவதாரங்களில் எட்டாவது அவதாரம், கிருஷ்ணாவதாரம், ,
🍁நவகிரகங்களில் சனி எட்டாம் பாவகத்தை குறிப்பவர்..இவரேஆயுள்காரகன் ..
🍁கிருஷ்ணர் வசுதேவர் மற்றும் தேவகிக்கு எட்டாவது மகனாகப் பிறந்தவர்
🍁திதிகளில் 8வது திதியான அஷ்டமி திதியில் அவதரித்தவர் ..
🍁ஜோதிடத்தில் எட்டாம் பாவகம் மறைபொருள் அறியும் தன்மை ஒருவரின் ஆயுள் பாவத்தை குறிக்கும் ..
🍁கிருஷ்ணனலீலைகளில் மிக முக்கியமாக சொல்லப்படும் ,ரச லீலைகள் எட்டு வகையாக சொல்லப்படுவதுண்டு ..
🍁பகவத்கீதையில் எட்டாவது ஸ்லோகம் நான்காவது அத்தியாயத்தில் வரக்கூடியது, அடிக்கடி சொல்லக் கூடியது..
“பரித்ராணாய சாதூனாம்,
விநாசாய ச துஷ்க்ருதாம்;
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய,
சம்பவாமி யுகே யுகே.” (பகவத் கீதை நான்காம் அத்தியாயம் எட்டாவது ஸ்லோகம்)…
“நல்லவர்களை காப்பதற்கும் தீயவர்களை அழிப்பதற்கும் யுகங்கள் தோறும் அவதரிப்பேன் “….
🍁ஜோதிடத்தில், மறைபொருள் ஞானம் என்பது இறைவனால் வழங்கப்படும் நுண்ணறிவு ஆகும் ..அதனுடைய எல்லை என்பதை தீர்மானிப்பதே இறைவன் மட்டுமே, ,
ஒருவரின் ஆயுளை முடிப்பதற்கும் ஆயுளை வளர்ப்பது இறைவனின் கையில் அதை மாற்றவும், தீர்மானிப்பதும் ..ஜோதிடரால் ஒரு வரையறைக்குள் மட்டுமே ஆயுள் பாவகத்தை உழைக்க முடியும் இறைவனின் கருணையுடன் ..
மொத்தத்தில் எட்டாம் பாவகத்தின் சூட்சமங்கள் அனைத்தும், இறைவனின் கையில் ..
மனிதனின் அறிவுக்கு எட்டியது சிற்றளவு மட்டுமே ..