20.5 C
New York
Saturday, July 27, 2024

Buy now

spot_img

மகம் நட்சத்திரத்தை பற்றிய பொதுவான பலன்

மகம் நட்சத்திரத்தை பற்றிய பொதுவான பலன்.

1. மகத்துப் பெண் ஜெகத்தை ஆளும் இது ஜோதிட பழமொழி.

2. சிறந்ததொரு ஞானமும், அறிவும் திறமையும், ஆளுகிற தன்மையும் உடையவர்கள்.

3. தன்னுடைய கொள்கையில் பிடிவாதமாக இருப்பார்.

4. நினைத்த காரியத்தை முடிக்கும் வரை ஓய மாட்டார்.

5. ஒரு சிலர் சூழ்ச்சியால் என் மாற்றப்படுவார்.

6. இவர்கள் பேசும் பொழுது வார்த்தைகள் உச்சரிப்பும் அதன் வெளிப்பாடும் சிறப்பாக இருக்கும்.

7. இவர்களை சீண்டி விட்டால் ஒரு கை பார்த்து விடுவார்கள்.

8. எண்ணம் சிந்தனை செயல் உயர்வை நோக்கியே இருக்கும்.

9.பெயர் புகழ் அந்தஸ்து கௌரவம் இவர்களைத் தேடிவரும், இதை தக்க வைப்பதற்கு அரும்பாடு படுவார்கள்.

10. இவர்கள் தன் எதிரிகளை, சமயம் பார்த்து, பாடம் புகட்டுவார்கள், தோர்க்கு அடிப்பார்கள்.

11. இவர்களுக்கு இரட்டை வருமானம் உண்டு, போராடும் குணமும் உண்டு, முரட்டுத்தனமும் உண்டு.

12.இயற்கையிலே இவர்களுக்கு ஆளுமை தன்மையும் தலைமை தாங்கும் பக்குவமும் நிறைந்திருக்கும்.

13. மகம் நட்சத்திரக்காரர்கள் முகம் அம்மாவின் சாயல் இருக்கும், அப்பாவின் பண்புகள் இருக்கும்.

14. மகம் என்றால் புலி அடக்கியாளும் தன்மை.

15. பாரம்பரியம் கலாச்சாரங்கள் ஆன்மீக வழிபாடுகள் அனைத்திலும் ஈடுபாடு உண்டு.

16. தாமத திருமணம், திருமணத் தடை, கலாட்டா திருமணம்,திருமண வாழ்வில் சற்று அதிருப்தி, சில சுக குறைகள், இருக்கும்.

17. அடுத்தவர்களிடம் கைகட்டி வேலை செய்வது இவர்களுக்கு சற்று பிடிக்காது.

18. மகம் பெண் நட்சத்திரக்காரர்கள் இடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டால் மிகவும் சிறந்தது.

19.வாழ்க்கையில் லட்சியம் நோக்குடன் பயணிப்பார்கள் எதையாவது ஒன்றை சாதிக்க வேண்டும் என்கிற துடிப்பு அதிகம் இருக்கும்.

20. இவர்கள் வெகு விரைவில் முன்னேற வேண்டும் என்பதற்காக தன் தொழிலையும் வேலையும் மாற்றிக்கொண்டே இருப்பார்.

21. இவர்கள் வம்சாவழி வம்சா வழி வழியாக, குலதெய்வ பூஜையை விடாமல் செய்வார்கள்.

22. அடிக்கடி பயணம் மேற்கொள்வார், வெளிநாட்டில் பிரவேசம் உண்டு.

23.இவர்கள் பேச்சில் கடுமை இருந்தாலும் மனதால் யாருக்கும் தீங்கு நினைக்க மாட்டார்.

24.மக நட்சத்திரக்காரர்கள் குறிப்பாக மகம் பெண் நட்சத்திரக்காரர்கள், எப்பேர்ப்பட்ட எதிர்ப்புகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் சமாளிக்கும் திறமை இவர்களிடம் உண்டு.

25. யாராக இருந்தாலும் சட்டம் ஒன்றுதான் ரூல்ஸ் ஒன்றுதான். கட்டுப்பட்டு நடக்க வலியுறுத்துவார்கள்.

26.இவர்களுக்கு கொடுக்க வேண்டிய மதிப்பும் மரியாதையும் நாம கொடுத்தாள், நமக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும் கிடைக்கும்.

27. மனசாட்சிக்கும் தெய்வத்துக்கும் கட்டுப்பட்டு நடப்பவர்கள்.

28. எல்லாத் துறைகளையும் தெரிந்து வைத்துக் கொண்டிருப்பார்கள், ஒரு சிலர் துறையில் தனித்துவமாக இருப்பார்கள்.

29.ஒரு தலைப்பை கொடுத்து இவர்களை பேசச் சொன்னால் மிகவும் அருமையாகவும் ஆழமாகவும் கவர்ந்து இழுக்கும் வார்த்தைகள் பயன்படுத்தி அற்புதமாக பேசுவார்கள்.

30. இவர்களுக்கு மறைமுக எதிரிகள், மறைமுக தாக்குதல் நிறைய இருக்கும்.

31. திட்டமிட்டு செயல்படுவதன் வல்லவர்கள், அதை குறிப்பிட்ட நேரத்தில் முடிப்பதில் திறமைசாலிகள்.

32. அடிக்கடி ஒற்றை விரலைக் காட்டி தான் பேசுவார்கள், கர்சீப்பால் முகத்தை அடிக்கடி துடைத்த கொள்வார்கள்.

33. சிறந்த ஒரு நேர்த்தியான உடைகளை அணிந்து, முகத்தில் ஒரு ஒளி வீச்சுடன், உதட்டில் ஒரு அழகான சிரிப்பும், நெற்றியில் தெய்வீக தன்மையின் அடையாளத்துடன், இவர்களைப் பார்க்கும் பொழுது கையெடுத்து கும்பிட வேண்டும், மரியாதை செலுத்த வேண்டும், என்கிற எண்ணம் உதயமாகும்.

🙏🌹🌹🙏🌹🌹🌹
ராமசுப்பிரமணியம். ஈரோடு
ஜோதிட மாணவன்.
🙏🌹🌹🌹🌹🌹🌹
(மேலே சொன்ன அனைத்துமே பொதுவான பலன்கள்).

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!