போன வழியே திரும்பக்கூடாத கோவில் எது தெரியுமா
✡️போன வழியே திரும்பக்கூடாத கோவில் எது , எங்கு உள்ளது என்பதை பற்றி இப்போது நாம் பார்க்கலாம்.
✡️மற்ற கோவில்களில் சென்ற வழியே திரும்புவதுதான் வழக்கம்.
✡️ஆனால், திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலில் வேறு வாசல் வழியே திரும்ப வேண்டும்.
✡️அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம். மற்ற கோவில்களில் சென்ற வழியே திரும்புவதுதான் வழக்கம்.
அர்ஜுனம் என்றால் மருதமரம். மருத மரத்தை தல விருட்சமாக கொண்ட தலங்கள் அர்ஜுனத் தலங்கள் என்றழைக்கப்படும்.
✡️வடக்கிலுள்ள ஸ்ரீசைலத்தை மல்லிகார்ஜுனம் என்றும், தெற்கில் திருநெல்வேலி அருகிலுள்ள திருப்புடை மருதூரை ஜுடார்ஜுனம் என்றும், இவ்விரு தலங்களுக்கு நடுவில் இருப்பதால் இத்தலம் மத்தியார்ஜுனம் என பெயர் பெற்றது.
அம்பிகை, அகத்தியர் வழிபட்ட இத்தலத்தில் சிவன் மகாலிங்க சுவாமி என்ற பெயரில் அருளுகிறார்.
✡️ஏழு பிரகாரம் கொண்ட இத்தலத்தில் அம்பிகை பெருநலமாமுலையம்மன் என்னும் பெயரில் அருள்பாலிக்கிறாள்,
✡️இங்கு எந்த வழியில் சென்றோமோ, அதே வழியில் திரும்பக் கூடாது என்பது நியதி.
✡️சிவன் சந்நிதி எதிரிலுள்ள கோபுரம் வழியாக நுழைந்து முதலில் படித்துறை விநாயகரை வணங்கி, சிவன், அம்பாள் சந்நிதிகளுக்குச் சென்று, பின்பு மூகாம்பிகையை தரிசித்து முடிக்க வேண்டும்.
வேறு வாசல் வழியாக வெளியே வர வேண்டும். இதற்கு ஒரு காரணம் உண்டு.
✡️ஏதேனும் பீடை மனிதனுக்கு இருந்தால், அது நுழைவு வாசலில் நின்று கொள்ளும்.
✡️கோவிலை விட்டு வெளியேறும் போது தொற்றிக் கொள்ளும்.வேறு வாசல் வழியாக வந்தால் பிடிக்காது.ஒருமுறை சிவன், அம்பிகையிடம் இத்தல மகிமையைச் சொல்ல, ஆனந்த கண்ணீர் வடித்தாள்.
அதுவே குளமாக இங்கு உருவெடுத்தது. இது காருண்ய (கருணை ) தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
✡️கும்பகோணம் & மயிலாடுதுறை செல்லும் வழி நடுவே உள்ளது. கும்பகோணத்தில் இருந்து 10 km. மிக அருமையான பெரிய கோவில்…