தனது பூர்விகத்தின் சொத்துக்களை அனுபவிக்க இயலாத ஜாதகர் யார்?
1. தராசு மையத்தின் புள்ளியில் செயல்படும் விசை போல, இராகு மற்றும் கேதுவின் மையத்தில் அமரும் குரு பகவான் இந்த விளைவுக்கு ஒரு முக்கிய காரணம். குருவுக்கு சதுர் கேந்திரத்தில் அமர்கின்ற கேது உடைய ஜாதகர் தனது பூர்வீக சொத்துக்களை அனுபவிப்பதில் நிச்சயம் சிக்கல் அல்லது கிடைத்தாலும் நிரந்தரம் இன்றி, கை நழுவி போகும் நிலை இருக்கும். உடன் பிறந்தவர்கள் வில்லங்கம் செய்வார்கள்.
2. குரு அல்லது கேதுவின் தசா புத்தி, மற்றும் கோச்சாரத்தில், கோட்சார குருவின் சதுர் கேந்திரத்தில் கோட்சார கேது போன்ற கால சூழ்நிலைகளில் கடன்களின் தொல்லை, தகுதிக்கு மீறி கட்டுக்கடங்காமல் இருக்கும். அதிலும் குறிப்பாக ஜென்ம குருவின் மேல் கோச்சார கேது , அல்லது ஜென்ம கேதுவின் மேல் கோச்சார குரு போன்ற காலங்களில் இது நடக்கும் சூழ்நிலைகள் அமையும்.
விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வணங்குதல் மற்றும் பூர்வீக சொத்துக்களை தனது பெயரில் வைத்து கொள்ளாமல், குடும்பத்தில் வேறு பெயர்களுக்கு பதிவு செய்து வைப்பது நன்று…
ஈசனை பணிந்து.. 🙏