16.3 C
New York
Friday, April 12, 2024

Buy now

spot_img

செய்வினை,ஏவல்,திருஷ்டி பாதிப்புகளிலிருந்து விடுபட

உங்களின் வளர்ச்சி பிடிக்காமலும்,உங்களின் மீதுள்ள கோவத்தின் உச்சகட்ட வெளிப்பாடாகவும் உங்களை அழிப்பதற்காக செய்வதே செய்வினை

இந்த செய்வினை,ஏவல்,திருஷ்டி பாதிப்புகளிலிருந்து விடுபட வாரம்தோறும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை நாட்களில் பஞ்சகவ்ய தண்ணீரை குளிக்கும் தண்ணீரோடு கலந்து குளிக்க வேண்டும்.

குளிப்பதற்கு முன்பாக கொஞ்சமாக பஞ்சகவ்ய தீர்த்தத்தை எடுத்து உங்களுடைய உச்சந்தலையில் சிறிதளவு வைத்துக்கொள்ளுங்கள். லேசாக தொப்புளை சுற்றி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு உள்ளங் கால்களில் தடவி கொள்ளுங்கள். இந்த மூன்று இடங்களிலும் பஞ்சகவ்ய நீரை தடவிக் கொண்டு ஒரு பத்து நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பின்பு குளிக்கின்ற தண்ணீரில் இரண்டு மூடி பஞ்சகவ்ய தீர்த்தத்தை ஊற்றி அந்த நீரில் தலைக்கு குளித்து விட வேண்டும். அதன் பின்பு நல்ல தண்ணீரில் ஒரு முறை குளித்துக் கொள்ளலாம். இப்படி இந்த பஞ்சகவ்ய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்யும்போது நமக்கு செய்வினை கோளாறு இருந்தாலும் சரி, கிரக சூழ்நிலைகளால் தோஷங்கள் இருந்தாலும் சரி, அதன் மூலம் பெரிய பாதிப்புகள் வராமல் தடுக்கப்படும்.
அடுத்தபடியாக இந்த தீர்த்தத்தை உங்கள் வீடு முழுவதும் தெளித்து விடுவதன் மூலம் வீட்டை பிடித்த தரித்திரம் விலகும். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்து கொள்ளுங்கள். இதே போல தான் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பஞ்சகவ்ய விளக்கை வாங்கி வீட்டில் எரிய விடுவது சிறப்பான பலனை கொடுக்கும். பஞ்சகவ்ய விளக்கு முழுவதும் அப்படியே நெருப்பு மூட்டி எரிய விட்டு விடவேண்டும்

மணிமுருகேசன்
ஆதிசித்தர் ஆன்மீக பீடம்
9943993305

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!