சதய நட்சத்திரத்தைப் பற்றி பொதுவான தகவல்
1. கோயில் கட்டி கும்பாபிஷேகம், செய்யும் யோகம் இவர்களுக்கு உண்டு.✔️✔️
2. இவர்களுடைய பேச்சு பிறரை கவரும் படியாக இருக்கும்.✔️✔️
3. இவருடைய பேச்சில் வாக்கியங்கள் அடுக்கு மொழியும் நீண்டதாகவும் இருக்கும்.❌❌
3. இந்த நட்சத்திரக்காரர்கள் எங்கு சென்றாலும் பின்னாடி உட்கார்ந்து, முன்னாடி நடக்கக் கூடிய அனைத்து விஷயங்களையும் கவனிப்பார்.✔️✔️
4. நிறைய ரகசியங்கள் இவர்களிடம் இருக்கும்.✔️✔️
5. சுயநலம் மற்றும் பொறாமை சற்று அதிகம்.✔️✔️
6. பிறர் பொருளின் மீது ஆசை படக்கூடிய சிந்தனை இருக்கும்.✔️✔️
7.இந்த நட்சத்திரக்காரர்கள் பேசும்பொழுது தலையைத் திருப்பி திருப்பி பேசுவார் அங்கும் இங்கும் பார்த்துப் பேசுவார்.✔️✔️
8. இவர்கள் சாதாரணமாக நடக்கும் பொழுது மூச்சு சுவாசம் இழுத்து வெளியே விடும்பொழுது, பிறருக்கு சத்தம் கேட்கும். ✔️✔️
9. இந்த நட்சத்திரக்காரர்கள் நல்ல கிரக அமைப்பு பெற்றாள், எண்ணிலடங்காத சாதனைகள் செய்வார், அதில் பிரம்மாண்டம் இருக்கும். உதாரணத்துக்கு ராஜராஜசோழன்.✔️❌
10. இவர்களுக்கு தோல் பிரச்சனை மற்றும், மற்றும் இவர்கள் பரம்பரையில் ஊனமுற்றோர் உண்டு.❌❌
11. இவர்கள் அமரும்பொழுது காலை மாற்றி மாற்றி உட்காருவார்.✔️✔️
12. உள்ளுறை விட வெளியூரில் அல்லது வெளிநாட்டில் சென்று வேலை செய்வதில் விருப்பம் அதிகம்.✔️✔️
13. கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றக் கூடியவர்.❌❌
14. உடல் வலிமை மிக்கவர்கள், கைகளை ஆட்டிக் கொண்டே பேசுவார்.✔️✔️
15. மன்னிக்கும் பக்குவம் குணமும் இருக்கும்✔️✔️ தண்டிக்கவும் தயங்கமாட்டார்.❌❌
16. தெய்வ பக்தி ஆன்மீக பக்தி இருக்கும், ஒரு சிலர் தீவிரமாக இருப்பார். சாமி ஆடி குறி சொல்பவர்களும் இருப்பார்.✔️✔️
17. ஜோதிட ஞானம், அமானுஷ்யம், மந்திரம், எந்திரம், போன்றவைகள் சிந்தனையும் இருக்கும்,✔️✔️ ஒரு சிலர் கைதேர்ந்த இருப்பார்.❌❌
18. இவர்கள் பயணிக்கும் பொழுது பெரிய பாதையில் பயணிப்பார், ஆனால் வாகனம் ஓட்டும் பொழுது வளைந்து வளைந்து ஓட்டுவார்.✔️✔️
19. ஆடை அணியும் பொழுது அதில் உள்ள டிசைன் பெரிதாக இருக்க வேண்டும், மற்றும் வித்தியாசமாக காட்சி அளிப்பார்.✔️✔️
20. பெண்கள் நகை அணியும் பொழுது, எல்லாமே சற்று நீளமாக இருக்க வேண்டும்.✔️✔️
21.இவர்களுக்கு வாழ்க்கையில் திருப்புமுனை திடீர் திடீரென்று நடக்கும். அது நல்லத் ஆனாலும் சரி கட்டத் ஆனாலும் சரி.✔️✔️
22. கணவன்/ மனைவி, யார் சதய நட்சத்திரம் ஆனாலும், சற்று ஒற்றுமை குறைவாக இருக்கும், ஏனென்றால் பிடிவாத குணம் தான் செய்வது சரி என்கிற எண்ணம் அதிகம் இருக்கும்.❌❌
23. இவர்கள் களமிறங்கி விட்டாள், எதிரிகள் பகைவர்கள் சற்று பயந்து ஓடி விடுவார்கள், ஏனென்றால் வார்த்தைகள் தடுக்கும், கோபத்தில் கை ஓங்கி விடுவார்கள்.✔️✔️
24. ஒருவருக்கு ஆபத்து என்றால் களமிறங்கி காப்பாற்றி நல்ல பெயரும் எடுப்பார்.
✔️✔️
25. இவரு இவர்களுடைய அடுக்குமொழி பேச்சினால், எல்லோரையும் கவர்ந்து இழுத்து விடுவார்.❌❌தேவைப்பட்டால் பொய் பேசுவார்
26. திறமை மிக்கவர் சாதுரியம் மிக்கவர், தர்ம சிந்தனையும் உடையவர்.✔️✔️
27. குறைந்தது இரண்டு மொழிக்கு மேல் பேசுவார்.✔️✔️
28. பிற மதத்தவர்களிடம் அன்பு அரவணைப்பு பாசம் நேசம் நட்பு சற்று அதிகமாக இருக்கும்.✔️✔️
29. போராடும் குணம் அதிகமாக இருக்கும், தான் சொல்வது சரி என்று கடைசிவரை வாதிடுவார்.✔️✔️
🙏🌹🙏🌹🙏🌹
ராமசுப்பிரமணியம் ஈரோடு
ஜோதிட மாணவன்
🙏🌹🙏🌹🙏🌹🌹🌹
(மேலே சொன்ன அனைத்தும் பொதுபலன்களே)
🙏🌹🙏🌹🌹🌹🌹🌹