குருபகவான் பலம் பெற
1. தெய்வ நம்பிக்கையை அதிகப்படுத்த வேண்டும், பக்தி ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும்.
2. குலதெய்வ வழிபாடு கண்டிப்பாக செய்ய வேண்டும்.
3. கடமை தவறாமல் இருக்க வேண்டும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.
4. மனிதநேயம் உள்ளவராக இருக்க வேண்டும்.
5. சிறு குழந்தைகளை திட்டாமல் அரவணைத்துப் போக வேண்டும்.
6. ஆசிரியர் தொழில் செய்பவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்ளுதல் மற்றும் அவர்களுக்கு உதவி செய்தல்.
7. பணத்தை அழகாக அடுக்கி பர்சில் வைத்துக் கொள்ள வேண்டும்.
8. வியாழக்கிழமை விரதம் இருப்பது சாலச் சிறந்தது.
9. கோயில் பணியில் இருப்பவர்கள் இடமும்,வேத மந்திரங்கள் சொல்பவர்களிடம், மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும் மற்றும் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
10. தான் பிறந்த மதத்தின் மீது பற்று உள்ளவராக இருக்க வேண்டும்.
11. பொறுமையும் இரக்க சிந்தனை குணமும் அதிகம் இருக்க வேண்டும்.
12. தங்கம் மற்றும் தங்கத்தினால் ஆபரணங்களை அணிதல்.
13. மஞ்சள் நிறத்தை அதிகமாக பயன்படுத்துதல்.
14. வடக்கு வடக்கு திசையை நோக்கி முடிவெடுத்தல்.
15. வங்கி மேலாளரிடம் நட்பு மற்றும் மரியாதையுடன் நடந்து கொள்ளுதல்.
16. பூஜை அறையை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல்.
17. பெரியவர்களிடம் மிகவும் மதிப்பும் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
18. புகழுக்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும் மற்றும் தற்பெருமையை தவிர்க்க வேண்டும்.
19. ஆன்மீக புத்தகங்கள் அல்லது ஸ்லோகங்கள் மந்திரங்கள் ஒரு ஐந்து நிமிடமாவது படிக்கிறதுக்கு ஒதுக்க வேண்டும்.
20. தேன் சீரகம் கடலை இனிப்புச்சுவை வெல்லம் போன்றவையை அதிகமாக சேர்த்துக் கொள்ளுதல்.
21. கொழுப்பு சக்தி அதிகமாக இருக்கும் நபர்களை தவறாக பேசக்கூடாது.
22. பிரம்ம முகூர்த்தத்தில் குளித்து பூஜை செய்வது மிகவும் சிறப்பு.
23. முகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல்.
24. காது குடைவதை நிறுத்திக்கொள்ளலாம்.
25. அசைவ உணவை சாப்பிடுவதை நிறுத்தவும்.
26. ஆடம்பரப் பொருட்களை தவிர்க்கவும்.
27. மாதத்தில் வரும் வருமானத்தில் ஒரு சிறு தொகையை கோயிலுக்கும் குலதெய்வம் உண்டியலில் சேர்க்கவும்.
28. அதிர்ந்து பேசாமல் சாந்தமாக பேச வேண்டும்.
29. சாப்பிடுவதற்கு முன்பும் சாப்பிட்ட பின்பும் மறக்காமல் தெய்வத்துக்கும் நன்றி சொல்ல வேண்டும்.
30. ஜீவ சமாதி அடைந்த குருமார்கள் கோயிலுக்கு சென்று வருடத்திற்கு ஒரு முறை தரிசனம் செய்ய வேண்டும்.
🙏🌹🙏🌹🌹🌹
ராமசுப்பிரமணியம் ஜோதிட மாணவன்