எதிர்மறை ஆற்றலால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு
எதிர்வினைகளின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி கழுத்துவலி, உடல்வலி ஏற்படும், மனச்சோர்வு உண்டாகும், வீட்டிற்குள் நுழைந்ததும் எந்த வேலையையும் செய்யத் தோன்றாது, எப்பொழுதும் அசதியாக இருக்கும், அடிக்கடி கொட்டாவி வர ஆரம்பிக்கும், மற்றவர்களிடம் இனிமையாகச் சிரித்துப் பேச முடியாமல் மன அழுத்தமாக இருக்கும். இதற்கு வீட்டின் அருகிலிருக்கும் அம்மன் கோயிலுக்குச் சென்று, அங்கு சூலத்தில் செருகப்பட்டிருக்கும் எலுமிச்சை பழத்தை கொண்டு வர வேண்டும். அதனை தண்ணீரில் பிழிந்து கலந்து விட்டு, வீடு முழுவதும் தெளித்து விட வேண்டும். மற்றும் வீட்டில் உள்ள உறுப்பினர்கள் அனைவரின் மீதும் லேசாக தெளித்து விட வேண்டும். பிறகு எலுமிச்சை பழங்களை வாங்கி அவற்றை மாலையாகக் கோர்த்து, அம்பாளுக்கு அணிவிக்க வேண்டும். ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக அறிந்து, குங்குமம் தடவி வீட்டு வாசலில் வைக்க வேண்டும். இவற்றை செய்வதன் மூலம் தாந்திரீக கோளாறிலிருந்து எளிதில் விடுபட முடியும்.
மணிமுருகேசன்
ஆதிசித்தர்பீடம்
9943993305