கர்மா தீர்க்கும் காசி பரிகாரம்.. திருச்சி ஒயாமாரியில்..
காசி ஜாதகம்
- காலபுருஷதத்துவதில் மேஷம் கடகம் துலாம் மகரம் ராசிகளில் சனி இருப்பது
- ஜென்ம லக்னத்திற்கு 1-4-7-10 இடங்களில் சனி நிற்பது
- இராகு கேது அச்சுக்குள் சனி நிற்பது
இதற்கு காசி சென்று பரிகாரம் செய்ய வேண்டும்…
ஆனால் காசிக்கு இணையான திருச்சியில் உள்ள ஒயாமாரி மயானத்தில் இந்த பரிகாரம் செய்யப்படுகிறது..
காசிக்கு இணையான விஷயங்கள் இந்த இடத்தில் உள்ளதால் காசி பரிகாரம் செய்ய ஏற்ற இடமாக உள்ளது..
பரிகாரம் விபரம்
திருச்சி ஓயாமாரி மயானத்தில் சடலங்களை எரிக்கும் வெட்டியான் வேலை செய்யும் தொழிலாளர்கள் எட்டு (8) நபர்களுக்கு கருப்பு நிறம் கலந்த போர்வை ஒன்று, சிக்கன் பிரியாணி,வாட்டர் பாட்டில், வெற்றிலை பாக்கு, காணிக்கை வைத்து அவர்களிடம் கொடுத்து பின் மயானத்திலேயே அருள்பாலிக்கும் அங்காளம்மனை வணங்கி, பைரவரை வணங்கி, பின் காசியில் உள்ளதை விட பெரிய சொரூபமாக இங்கே காவிரியை நோக்கி நின்று அருள் பாலிக்கும் ஹரிச்சந்திர மகாராஜாவை வணங்கி, வாராகி அம்மனையும் வணங்கி, பின் மயானத்திற்கு எதிர்புறம் உள்ள படித்துறையிலோ அல்லது ஶ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையிலோ நீராடி அணிந்திருக்கும் ஆடைகளை ஆற்றில் விட்டு வேறு ஆடைகளை அணிந்து பின் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசித்து அனைத்து கர்மாவையும் மயானத்தில் நிவர்த்தி செய்து உன் பாதங்களை சரணடைகிறோம் என்று ஆத்மார்த்தமாக வேண்டிக்கொண்டு வீடு திரும்பவும்.
முழு பரிகாரம்:
அவர்களுக்கு காலை உணவு மதியம் சிக்கன் பிரியாணி+ போர்வை(சனி, செவ்வாய்) இரவு உணவுடன் மது பாட்டில் (சனி,ராகு) சேர்த்து கொடுத்துவிடவேண்டும்.
நிபந்தனை :
பரிகாரம் செய்வதற்கு மூன்று நாட்கள் முன்பிலிருந்து அசைவம் சாப்பிடுவதை தவிர்க்கவும் கருப்பு நிற ஆடை அணிவதையும் தவிர்க்க வேண்டும்