7.5 C
New York
Thursday, April 25, 2024

Buy now

spot_img

பஞ்சமுகத்தின் தத்துவம் என்ன

பஞ்சமுகத்தின் தத்துவம் என்ன

 

🌼ஆஞ்சநேயர் தன் முகத்தோடு நான்கு முகங்களை சேர்த்து பஞ்சமுக ஆஞ்சநேயராக மாற காரணம் என்ன

 

இந்தியா முழுவதும், ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமி

 

ஆஞ்சநேயர்,

ஹனுமான்ஜி,

மாருதி,

என பல பெயர்களால் வழிபடப்படுகிறார்.

பஞ்சமுக_ஆஞ்சநேயரின்

தோற்றம்

பஞ்சமுக ஆஞ்சநேயரின் தோற்றத்தைப் பற்றி இராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு கிளைக் கதையிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

 

இராம  – இராவண யுத்தத்தின் போது,

 

பாதாளலோக அரசனான மஹிராவணாவின் உதவியை இராவணன் நாடினான்.

 

🌼ஹனுமார்,

இராம இலட்சுமணர்களைப் பாதுகாக்க, தனது வாலையே ஒரு கோட்டையாக மாற்றி, அதில் பத்திரமாக அவர்களைப் பாதுகாத்தார்.

ஆனாலும், மஹிராவணாவோ, விபீஷணன் உருவம் எடுத்து வந்து, அவர்களை சிறைப் பிடித்து, பாதாளலோகம் கூட்டிச் சென்றான்.

 

🌼அதை அறிந்த ஹனுமார், அவர்களை பத்திரமாக மீட்க, பாதாளலோகம் சென்றார்.

 

🌼அங்கு சென்ற பிறகு தான், அவ்விடத்தில் எரிந்து கொண்டிருந்த ஐந்து விளக்குகளையும் ஒரு சேர அணைத்தால் தான், மஹிராவணாவின் உயிர் பிரியும் என்பதை அறிந்தார்.

 

உடனே, தன் முகத்துடன்,

 

ஸ்ரீநரசிம்ம சுவாமி,

ஸ்ரீஹயக்ரீவ சுவாமி,

ஸ்ரீலஷ்மி_வராக சுவாமி

மற்றும்

ஸ்ரீமஹாவீர_கருட சுவாமி

 

🌼ஆகியோர் முகங்களையும் கொண்ட பஞ்ச முக வடிவம் எடுத்து,

அந்த ஐந்து விளக்குகளையும் ஒரு சேர அணைத்தார்.

 

🌼இதனால், கொடியவன் மஹிராவணான் மாண்டான்.பிறகு ஹனுமாரும், இராம இலட்சுமணர்களை பத்திரமாக மீட்டு வந்தார்.

மேலும், பஞ்சமுக ஆஞ்சநேயர், மந்த்ராலய மகானான ஸ்ரீராகவேந்த்ர தீர்த்தரின் உபாசனை தெய்வமாகத் திகழ்கிறார்.

 

🌼அவர், பஞ்சமுக ஆஞ்சநேயரை நினைத்து தியானம் செய்த இடம் பஞ்சமுகி என்றழைக்கப்படுகிறது.

 

🌼அங்கு, பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது.கும்பகோணத்திலும், பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

🌼திருவள்ளூர் (சென்னையிலிருந்து 45 கி.மீ தொலைவு) அருகிலுள்ள பெரியகுப்பம் கிராமத்தில் மிகப் பிரம்மாண்டமான 32 அடி உயரமுள்ள, ஸ்ரீவிஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர்

சிலை மகாபிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

 

🌼பஞ்சமுகங்களின்முக்கியத்துவம்

கிழக்குத் திசையை நோக்கியுள்ள

ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமி முகமானது, நமது பாவத்தின் கறைகளைப் போக்குவதுடன், மனதையும் தூய்மைப் படுத்துகிறது.

 

🌼தெற்குத் திசையை நோக்கியுள்ள

ஸ்ரீநரசிம்மர் சுவாமி முகமானது, நமக்குள் இருக்கும் எதிரிகள் பற்றிய பயத்தைப் போக்குவதுடன், நம்மை வெற்றி பெறவும் வைக்கிறது.

 

🌼மேற்குத் திசையை நோக்கியுள்ள

ஸ்ரீமஹாவீர_கருட சுவாமி முகமானது,

தீய சக்திகள் மற்றும் காத்து கருப்பினால் ஏற்படும் தீய விளைவுகளைப் உடனடியாகப் போக்குவதுடன்,

 

🌼கொடிய விஷக்கடியினால் நமது உடலில் சேரும் விஷத்தையும் முறிக்கிறது.

 

🌼வடக்குத் திசையை நோக்கியுள்ள

ஸ்ரீலஷ்மி_வராக சுவாமி முகமானது,

நமக்கு கிரகங்களின் பெயர்ச்சியால் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து விடுவிப்பதுடன்,

 

🌼அனைத்து விதமான அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அளிக்கிறது.மேல்நோக்கியுள்ள

ஸ்ரீஹயக்ரீவ சுவாமி முகமானது, நமக்கு ஞானத்தினையும், நாம் ஈடுபடும் அனைத்து காரியங்களிலும் வெற்றியினையும், புத்ர பாக்கியம் அளிக்கிறது

 

🌼ஆஞ்சநேய பகவானை மனதில் நினைத்துக் கொண்டு

ஓம்  ஸ்ரீராம் ஜெயராம்

ஜெய ஜெய ராம்

 

என்ற வார்த்தையை நாம் மனதார சொல்லும் பொழுது

 

🌼நாம் எங்கு எந்த இடத்தில் சொல்கிறோமோ அந்த இடத்திற்கு வாயு பகவான் ஸ்ரீ ஆஞ்சநேயர் பகவான் உடன் வந்து நிற்பார்

 

🌼 ஸ்ரீ  ராம நாமத்தை சொல்லும் பொழுது ஆஞ்சநேயருக்கு தனி பெரும் சந்தோசம் ஏற்படும் என்பது நிச்சயமே

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!