பஞ்சமுகத்தின் தத்துவம் என்ன
🌼ஆஞ்சநேயர் தன் முகத்தோடு நான்கு முகங்களை சேர்த்து பஞ்சமுக ஆஞ்சநேயராக மாற காரணம் என்ன
இந்தியா முழுவதும், ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமி
ஆஞ்சநேயர்,
ஹனுமான்ஜி,
மாருதி,
என பல பெயர்களால் வழிபடப்படுகிறார்.
பஞ்சமுக_ஆஞ்சநேயரின்
தோற்றம்
பஞ்சமுக ஆஞ்சநேயரின் தோற்றத்தைப் பற்றி இராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு கிளைக் கதையிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
இராம – இராவண யுத்தத்தின் போது,
பாதாளலோக அரசனான மஹிராவணாவின் உதவியை இராவணன் நாடினான்.
🌼ஹனுமார்,
இராம இலட்சுமணர்களைப் பாதுகாக்க, தனது வாலையே ஒரு கோட்டையாக மாற்றி, அதில் பத்திரமாக அவர்களைப் பாதுகாத்தார்.
ஆனாலும், மஹிராவணாவோ, விபீஷணன் உருவம் எடுத்து வந்து, அவர்களை சிறைப் பிடித்து, பாதாளலோகம் கூட்டிச் சென்றான்.
🌼அதை அறிந்த ஹனுமார், அவர்களை பத்திரமாக மீட்க, பாதாளலோகம் சென்றார்.
🌼அங்கு சென்ற பிறகு தான், அவ்விடத்தில் எரிந்து கொண்டிருந்த ஐந்து விளக்குகளையும் ஒரு சேர அணைத்தால் தான், மஹிராவணாவின் உயிர் பிரியும் என்பதை அறிந்தார்.
உடனே, தன் முகத்துடன்,
ஸ்ரீநரசிம்ம சுவாமி,
ஸ்ரீஹயக்ரீவ சுவாமி,
ஸ்ரீலஷ்மி_வராக சுவாமி
மற்றும்
ஸ்ரீமஹாவீர_கருட சுவாமி
🌼ஆகியோர் முகங்களையும் கொண்ட பஞ்ச முக வடிவம் எடுத்து,
அந்த ஐந்து விளக்குகளையும் ஒரு சேர அணைத்தார்.
🌼இதனால், கொடியவன் மஹிராவணான் மாண்டான்.பிறகு ஹனுமாரும், இராம இலட்சுமணர்களை பத்திரமாக மீட்டு வந்தார்.
மேலும், பஞ்சமுக ஆஞ்சநேயர், மந்த்ராலய மகானான ஸ்ரீராகவேந்த்ர தீர்த்தரின் உபாசனை தெய்வமாகத் திகழ்கிறார்.
🌼அவர், பஞ்சமுக ஆஞ்சநேயரை நினைத்து தியானம் செய்த இடம் பஞ்சமுகி என்றழைக்கப்படுகிறது.
🌼அங்கு, பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது.கும்பகோணத்திலும், பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
🌼திருவள்ளூர் (சென்னையிலிருந்து 45 கி.மீ தொலைவு) அருகிலுள்ள பெரியகுப்பம் கிராமத்தில் மிகப் பிரம்மாண்டமான 32 அடி உயரமுள்ள, ஸ்ரீவிஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர்
சிலை மகாபிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
🌼பஞ்சமுகங்களின்முக்கியத்துவம்
கிழக்குத் திசையை நோக்கியுள்ள
ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமி முகமானது, நமது பாவத்தின் கறைகளைப் போக்குவதுடன், மனதையும் தூய்மைப் படுத்துகிறது.
🌼தெற்குத் திசையை நோக்கியுள்ள
ஸ்ரீநரசிம்மர் சுவாமி முகமானது, நமக்குள் இருக்கும் எதிரிகள் பற்றிய பயத்தைப் போக்குவதுடன், நம்மை வெற்றி பெறவும் வைக்கிறது.
🌼மேற்குத் திசையை நோக்கியுள்ள
ஸ்ரீமஹாவீர_கருட சுவாமி முகமானது,
தீய சக்திகள் மற்றும் காத்து கருப்பினால் ஏற்படும் தீய விளைவுகளைப் உடனடியாகப் போக்குவதுடன்,
🌼கொடிய விஷக்கடியினால் நமது உடலில் சேரும் விஷத்தையும் முறிக்கிறது.
🌼வடக்குத் திசையை நோக்கியுள்ள
ஸ்ரீலஷ்மி_வராக சுவாமி முகமானது,
நமக்கு கிரகங்களின் பெயர்ச்சியால் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து விடுவிப்பதுடன்,
🌼அனைத்து விதமான அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அளிக்கிறது.மேல்நோக்கியுள்ள
ஸ்ரீஹயக்ரீவ சுவாமி முகமானது, நமக்கு ஞானத்தினையும், நாம் ஈடுபடும் அனைத்து காரியங்களிலும் வெற்றியினையும், புத்ர பாக்கியம் அளிக்கிறது
🌼ஆஞ்சநேய பகவானை மனதில் நினைத்துக் கொண்டு
ஓம் ஸ்ரீராம் ஜெயராம்
ஜெய ஜெய ராம்
என்ற வார்த்தையை நாம் மனதார சொல்லும் பொழுது
🌼நாம் எங்கு எந்த இடத்தில் சொல்கிறோமோ அந்த இடத்திற்கு வாயு பகவான் ஸ்ரீ ஆஞ்சநேயர் பகவான் உடன் வந்து நிற்பார்
🌼 ஸ்ரீ ராம நாமத்தை சொல்லும் பொழுது ஆஞ்சநேயருக்கு தனி பெரும் சந்தோசம் ஏற்படும் என்பது நிச்சயமே