நாம் ஜாதகத்திலே பலன்களை எப்படி சரியாக எடுத்துரைப்பது என்பதற்கான சில விஷயங்களை இங்கு நாம் சுருக்கமாக பார்ப்போம்
முதலில் ஒரு குழந்தை ஜனிக்கும் போது அந்த குழந்தையின் பிறந்த தேதி மாதம் வருடம் நேரம் ஆகியவற்றை நாம் முன்பு குறித்து வைத்துக் கொள்வோம்
குழந்தை பிறந்த நேரத்தை நாம் சரியான முறையில் இருக்கிறதா என்பதற்காக ஒரு சிறு கணிதத்தை நாம் செய்யவேண்டும் இது ஒவ்வொரு ஜோதிடரின் தலையாய கடமை
இந்த கணிதம் எதற்காக நாம் செய்யப்படுகிறோம் குழந்தை பிறந்த நேரமும் வானத்தில் கிரகங்கள் சஞ்சரிக்கும் கூடிய நேரமும் சரியானதா என்பதை யூகித்து அதற்குண்டான ஒரு சரியான கணிதத்தின் மூலமாக இந்த பிரபஞ்சத்தில் பிறக்கின்ற குழந்தையின் உயிரும் இந்தப் பிரபஞ்ச சக்தியின் பரமாத்மாவாலள் கொடுக்கப்படுகின்ற பரமாத்மா சக்தியுடன் இணைந்து இந்த ஜீவாத்மா பயணிப்பதற்கான கால கணிதமே லக்ன கணிதம் இந்த கணிதத்தின் மூலமாக உடல் உயிர் இரண்டும் ஒன்றாக இணைத்து இந்த கணிதம் தேவைப்படுகிறது இந்த கணிதத்தில் பிழை ஏற்பட்டு இருப்பின் ஜாதகம் பிழை ஏற்படும் என்பது ஜோதிட அன்பர்களுக்கு நன்றாகத் தெரியும்
இந்த லக்ன கணிதத்தை நாம் சூரியனையும் சந்திரனையும் அன்றைய கிழமை நட்சத்திரமும் திதியும். கரணமும். யோகமும் ஆகிய இந்த ஏழு வகையான அமைப்பை சரியான முறையில் அமைத்து அதற்கு பின்பு நாம் ஜோதிடம் சொல்ல ஏதுவாக இருக்கும்
முதலில் நாம் ஜாதகத்தை பலன் சொல்வதற்கு எடுத்துக்கொள்ள வேண்டியது கிழமை நாதன் எந்த வகையான அமைப்பை பெற்று இருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டு அதற்குப் பின் மற்ற விசேஷமான கணிதம் தன்மையைப் பயன்படுத்தி நாம் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும்
உதாரணமாக
ஒரு குழந்தை ஞாயிற்றுக்கிழமை பிறந்திருப்பதாக வைத்துக் கொண்டால் இந்த ஞாயிற்றுக்கிழமை தாமச குணம் உடைய கிழமை ஆகும்
இந்த தாமச குணம் உடைய கிழமையில் ஒரு குழந்தை ஜனிக்கும் போது இவர்களுக்கு உடனடியாக ஒரு விஷயங்களை தெரிந்து கொள்வது இவர்களால் முடியாது இவர்கள் தன்னுடைய வாழ்நாளில் அனுபவித்து ஆராய்ந்து தனக்கு பிடித்த குணாதிசயங்களை இவர்கள் சேகரித்து வைத்துக் கொள்வார்கள்
இந்த குணம் உடைய குழந்தை முக்குண வேளை என்று சொல்லக்கூடிய தாமச சாத்வீக ராட்சச குணத்தில் எந்த குணத்தில் ஒரு குழந்தை பிறந்திருக்கிறது என்பதை நாம் முக்குண வேலையின் அடிப்படையில் கணித்து எடுத்து அதற்குண்டான குணத்தை இந்த கிழமை நாதன் உடன் இணைக்க வேண்டும்
கிழமை நாதன் அதனுடைய பலனையும் முக்குண வேளைஅதனுடைய பலனையும் இணைத்து எந்த திதியில் பிறந்திருக்கிறார் என்று பார்த்து இணைக்க வேண்டும்
பிறந்த நட்சத்திர நாதனின் அமைப்பையும் நின்ற பாதத்தையும் கவனிக்க வேண்டும் இந்த நட்சத்திரத்தின் குணமே உயிர் காரகத்துவம் ஆக இருப்பதால் இந்த நட்சத்திரங்களின் உடைய அமைப்பை மிக நுட்பமாக கவனித்து பலன்களை நிர்ணயம் செய்ய வேண்டும்
இதில் அவர்கள் எந்த பகுதியில் பிறந்து இருக்கிறார்கள் என்று பார்ப்பதற்கு கரணநாதன் வருவார்கள் இந்த கர்ண நாதனின்அவர்களின் குணத்தின் அடிப்படையில் வைத்து காரியங்களை இவர்கள் எப்படி எடுப்பார்கள் என்பதை யூகித்து அறிய வேண்டும் பின்பு இந்த கரணநாதன் உடன் யோகநாதனை இணைத்து அந்த யோகத்தில் இவர்கள் எப்படி பெற்றிருக்கிறார்கள் என்று இனைக்க வேண்டும்
உதாரணமாக
ஞாயிற்றுக்கிழமையில் பிறக்கும் அஸ்வினி நட்சத்திரத்தின் உடைய தன்மையும்
திங்கட்கிழமையில் பிறக்கும் அசுவினி நட்சத்திரம் கூடிய தன்மையும்
செவ்வாய்க்கிழமையில் திறக்கும் அஸ்வினி நட்சத்திரம் கூடிய தன்மையும்
புதன்கிழமையில் பிறக்கும் அஸ்வினி நட்சத்திரம் கூடிய தன்மையும்
வியாழக்கிழமையில் பிறக்கும் அஸ்வினி நட்சத்திரம் கூடிய தன்மையும்
வெள்ளிக்கிழமையில் பிறக்கும் அஸ்வினி நட்சத்திரத்தில் தன்மையும்
சனிக்கிழமையில் பிறக்கும் அசுவினி நட்சத்திரம் தன்மையும் முற்றிலும் வேறு வேறாக இருக்கும் என்பதை நாம் யூகித்து பலன் களை எடுக்க வேண்டும்
இது என்னுடைய சொந்த அனுபவம்
என்றும் உங்கள் அன்பு
பூ.சி. பெரியசாமி ஜோதிடர்