தலையற்றவன் கேது. ஆகவே தலை மட்டுமே கொண்ட ராகுவின் தாக்கத்தை குறைக்க, கேது காரகத்துவமான மனித தலையற்ற தெய்வ வழிபாடு சிறப்பு.
ஆகவே உடைந்த நட்சத்திரங்கள் என்று அழைக்கப்படும் கார்த்திகை, மிருகசீரிடம், புனர்பூசம், உத்திரம், சித்திரை, விசாகம், உத்திராடம், அவிட்டம் மற்றும் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த நபர்கள் மட்டும் கீழ்கண்ட மனித முகம் அற்ற சுப தாரை (அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்கு ஏற்றவாறு) தெய்வங்களை தேர்ந்தெடுத்து வழிபாடு செய்வது சிறப்பு.
தெய்வங்களின் ஜென்ம தாரைகள்
===============================
விநாயகர் – மூலம், அஸ்தம்
ஆஞ்சநேயர் – மூலம், ஸ்வாதி
வராஹி – ஆயில்யம்
வராஹர் – கேட்டை
சரபேஸ்வரர் – திருவாதிரை
நரசிம்மர் – ஸ்வாதி
பிரத்யங்கரா தேவி – ஸ்வாதி
ஹயக்ரீவர் – திருவோணம்
சுகமகரிஷி – திருவோணம்
காமதேனு – உத்திரட்டாதி
குறிப்பு – ராகு தோசம் கொண்ட நட்சத்திரங்கள் சதயம் மற்றும் பூச நட்சத்திர நபர்களும் மேற்கண்ட தெய்வ வழிபாடுகள் செய்வது சிறப்பு.