இந்த ஓரையில் இதை மட்டும் செய்து விட்டால்! இதெல்லாம் நடக்குமா
1. ஓரை அறிந்தவனுக்கு எவரையும் வெல்லும் அறிவாற்றல் உண்டு
நம் வீட்டு காலண்டருக்கு பின்னால் ஓரை என்று ஒன்று குறிப்பிடப்பட்டு இருக்கும்.
2.இந்த ஓரையில் குறிப்பிடப்பட்டு இருக்கும் நேரம் எதற்காக பயன்படுகிறது? அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது? என்பது பலருக்கும் தெரிவதில்லை.
3.ஓரை பார்த்து செயல்படுபவனுக்கு வாழ்க்கையில் தோல்வி என்பதே கிடையாது.
4.ஓரை இரகசியம் அறிந்தவர்களுக்கு எதிலும் வெற்றி தான் என்கிறது ஜோதிடம் சாஸ்திரம்…..
5.அதைப் பற்றிய தகவல்களை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
6.உங்களுடைய வாழ்க்கையில் ஒரு முறை ஓரைப் பார்த்து செயல்களை துவங்கி பாருங்கள்! அதன் பிறகு நீங்களே ஆச்சரியப்பட்டுப் போகும் அளவில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.
7.சுப ஓரையான குரு ஓரை, நல்ல விஷயங்களுக்கு பயன்பட்டாலும் வெள்ளிக் கிழமையில் பகை கிரகம் இருப்பதால் குரு ஓரையை தவிர்ப்பது உத்தமம்.
8.ஓரைகளின் கதிர் வீச்சை உணர்ந்து செயல்பட்டால் எல்லாவற்றிலும் நலம் பெறலாம்.
9.சனி ஓரையில் நீங்கள் ஒருவருக்கு கொடுக்க வேண்டிய கடனை திருப்பிக் கொடுத்துப் பாருங்கள்! மீண்டும் கடன் வாங்குவதற்கான சூழ்நிலையே உங்களை அணுகாது. ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கிகள், அது போன்ற நிலுவைத் தொகைகள் எதுவாக இருந்தாலும், சனி ஓரையில் கொடுக்கும் பொழுது மிகவும் நல்ல பலன்களைத் தரும். வீட்டில் மரத்தை வளர்க்கும் பொழுது சனி ஓரை பார்த்து வளர்ப்பது அதிர்ஷ்டம் தரும்.
10.சனி ஓரையில் பாத யாத்திரை, நடை பயணம் போன்றவற்றை தூங்குவது பாவத்தைப் போக்கும். சனி ஓரையில் குடும்பத்தில் பிரச்சனைகளும், கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் ஏற்படும் பொழுது மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இந்த நேரத்தில் எழும் சர்ச்சைகள் மிகப் பெரிய அளவில் விஸ்வரூபமெடுக்கும் என்பதால் அடக்கி வாசிப்பது நல்லது.
11.சுப ஓரையாக இருக்கும் குரு ஓரையில் புதிய தொழில் துவங்குவது, வியாபாரத்தை விருத்தி செய்வது, விவசாயம் செய்யத் துவங்குவது போன்ற விஷயங்களை செய்வது வழக்கம். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் பொழுது சுப ஓரையான குரு ஓரையில் வாங்குவது அதிர்ஷ்டத்தை தரும். குரு ஓரையில் கண்டம் விட்டு கண்டம் செல்வதும், நீர்வழி பயணங்கள் மேற்கொள்வது, சட்டத்திற்குப் புறம்பான செயல்களை செய்வது போன்ற விஷயங்களை செய்தால் தீராத ஆபத்து உங்களை தேடி வந்து சேரும்.
12.புதிய நிலம் வாங்குவது, விற்பது தொடர்பான விஷயங்களை சார்ந்த செயல்களில் ஈடுபடும் பொழுது செவ்வாய் ஓரை பார்த்துச் செய்வது நல்லது. மருத்துவ உதவிகள் செய்வது, ரத்ததானம், உறுப்பு தானம் போன்ற விஷயங்களை செய்யும் பொழுது செவ்வாய் ஓரை பார்க்கலாம். உங்களுடைய அதிகாரத்தைகி காண்பிக்கும் பொழுதும், ஒரு விஷயத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டியது இருக்கும் பொழுததும் அழிவுக்கு உரிய கிரகமாக இருக்கும் செவ்வாய் ஓரையில் செய்வது நல்லது.
13.செவ்வாய் ஓரையில் நல்ல விஷயங்களை சுபகாரியங்களை செய்ய முடியாவிட்டாலும், வம்பு வழக்குகளுக்கு தீர்வு காணவும், பஞ்சாயத்து பேசவும் இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இறைவனுக்கு செய்யக் கூடிய தானங்களும், கொடைகளும் இந்த செவ்வாய் ஓரையில் செய்வது நல்லது. செவ்வாய் ஓரையில் ஒரு பொருள் திடீரென காணாமல் போனால் அதை நீங்கள் உடனே தேடும் பொழுது கிடைத்துவிடும்.
14.அதுவும் தெற்கு திசைகளில் தேடினால் கிடைக்கும் என்று “ஜோதிட நூல்கள் கூறுகிறது.” செவ்வாய் ஓரையில் காணாமல் போன பொருட்களை தேடாமல் தாமதித்தால் கடைசி வரை கிடைக்காமலேயே போய் விடுமாம்..