11.1 C
New York
Tuesday, April 16, 2024

Buy now

spot_img

ஆயில்யம் நட்சத்திர பொதுப் பலன்கள்

ஆயில்யம் நட்சத்திர பொதுப் பலன்கள்

1. இவர்களிடம் ஐந்து விதமான அறிவை நாம் பார்க்கலாம். புத்தக , பொது, இயற்கை, சூழ்நிலை, சமையல்,அறிவு.

2. இடத்திற்கு தகுந்தார் போல் சூழ்நிலைக்கு ஏற்றார்போல் மிகவும் அருமையாக பேசுவார்.

3.ஒரு நல்லது நடக்க வேண்டும் என்றால் பொய் சொல்வதில் தப்பில்லை என்கிற சிந்தனையும் எண்ணமும் உடையவர்கள்.

4. விருந்தோம்பல் சமையல் இவர்களை மிஞ்ச ஆளில்லை.

5. குடும்பத்தில் உள்ள அனைத்து பொறுப்புகளையும் தலையில் போட்டுக்கொண்டு திறம்படச் செய்யக்கூடிய வல்லவர்கள்.

6. கோபம் அதிகமாக வரும். சீறி பாய் வார்கள்.

7. இவர்களுக்கு மூச்சு அதிகமாக வாங்கும்.

8. எங்கு சென்றாலும் எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் வாழ்ந்து விடுவார்கள்.

9. தந்திரமாகவும்,சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பதில் வல்லவர்கள்.

10. நன்றாக படித்திருப்பார்கள்.படிப்புக்கேற்ற வேலை இல்லை என்றாலும் கிடைக்கிற வேலையை தக்க வைத்துக்கொள்வார்.

11. இவர்கள் மனம் நோகும்படி பேசிவிட்டால் அந்த ரணம் ஆறுவதற்கு பல நாட்கள் ஆகும்,சமயம் கிடைக்கும் பொழுது அதைக் குத்திக் காட்டிக் கொண்டே இருப்பார்கள்.

12. இரட்டை எண்ணம் இரட்டை பேச்சு இரட்டை சிந்தனை அரட்டை செயல்கள் அதிகமாக இருக்கும்.

13. குடும்பத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார். பெரியவர்களை நன்றாக மதிப்பு மரியாதை கொடுத்து நடத்துவார்.

14. இவர்களுடைய வயது உருவத்தை வைத்து எடை போட முடியாது.

15. எல்லாத்துக்கும் ஒரு திட்டம் இவர்களிடம் இருக்கும், எதையும் கணக்குப் போட்டு பார்த்துக் கொண்டே இருப்பார்.

16. எதிரிகளை சமயம் பார்த்து பழி வாங்கி விடுவார்கள்.

17. சிறந்த பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், கணக்கு வாத்தியார், பெரிய நிறுவனத்தில் கணக்காளர், வங்கி, பினன்ஸ், போன்ற துறையில் சிறப்பாக விளங்குவார், மற்றும் நன்றாகப் பாடுவார்.

18. இவர்களிடம் ஆளுமைத் தன்மை சிறப்பாக இருக்கும், பேசினால் ஈர்க்க கூடியவர்கள்.

19.இவர்களுடைய வழிபாடு சில நேரங்களில் முரட்டுத் தனமாக இருந்தாலும் மனதிற்குள் சார்ந்த மாணவர்கள் தான்.

20. ஏழை பணக்காரன் என்கிற பாகுபாடு இவர்களிடம் இல்லை.

21.மனது சொல்வதை கேட்பதை விட அறிவுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்.

22.குழந்தை பிறப்பதில் இவர்களுக்கு பிரச்சனையை உண்டு அல்லது தாமதம் ஏற்படும்.

23. இவர்கள் என்னதான் திட்டமிட்டு வாழ்க்கையை நடத்தினாலும், முற்றிலும் எதிர்பாராத திடீர் திடீர் பிரச்சனைகளை எதிர் கொள்வார்.

24. அறிவில் சிறந்தவர்களாக இருப்பதால், சில விஷயங்கள் தன் அறிவுக்கு ஒத்து வரவில்லை என்றால் வாக்குவாதம் செய்வார்.

25.அறிவுக்கூர்மை சிறப்பாக இருப்பதால் தான் எடுக்கும் அனைத்து முடிவுகளும் சரியாக இருக்கும், சரியே என்கிற எண்ணத்தில் செயல்படும் பொழுது, பல சறுக்கல்கள், பிரச்சனைகளையும் எதிர் கொள்வார்.

26.இவர்களுக்கு ஒருவரை பிடித்து விட்டால் அவர்களுக்காக எதையும் செய்வார்.அவர்கள் எப்பொழுதும் இவர்களுக்கு பிடித்தவராக நடந்து கொள்ள வேண்டும்.இல்லை என்றால் அவர்களை தூக்கி எரிய தயங்க மாட்டார்.

27. நிறைய ரகசியங்களை மனதிற்குள் வைத்திருப்பார். வெளி பழக்கத்தை வைத்து இவர்களை எடை எக்காலத்திலும் போட முடியாது.

28. இவர்களுடைய மனநிலை மாறிக்கொண்டே இருக்கும், அதற்கேற்றால் போல் இவர்கள் செயல்பாடு மாறிவிடும்.

29. கண்மூடித்தனமாக யாரையும் நம்ப மாட்டார். ஒரு சந்தேகக் கண் இருந்து கொண்டே இருக்கும்.

30.இவர்கள் பார்ப்பதற்கும் பேசுவதற்கும் பழகுவதற்கும் இனிமையானவர்கள் ஆக இருப்பார்கள்.

31.பக்தி ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டு, எல்லாவிதமான கடவுளையும் கும்பிடுவார்கள், பெருமாள் மீது சற்று அதிக பக்தி.

32. குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சொந்தங்கள் நல்ல பெயர் வாங்கி விடுவார்.

33. இவர்கள் படிக்கும் பொழுது, சுவற்றில் சாய்ந்து கொண்டு, அல்லது படுக்கையில் படுத்துக் கொண்டுதான் படிப்பார்.

34.சுத்த மாக இருப்பார்கள் வீட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்வார்கள்.

35. இவர்களுக்கு கூட்டுத்தொழில் ஆகாது, கல்வியில் சிறந்து விளங்கி, தன் அறிவை மூலதனமாக வைத்து, வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறுவார்கள்.

🙏🌹🙏🌹🌹🌹🙏🌹
ராமசுப்பிரமணியம் ஈரோடு
ஜோதிட மாணவன்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!