9.5 C
New York
Monday, March 25, 2024

Buy now

spot_img

நாம் யார் சிவ பக்தரா? அல்லது சிவன் அடியாரா?

நாம் யார் சிவ பக்தரா? அல்லது சிவன் அடியாரா?
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏
இவ்விரண்டுமே ஒன்றுபோலத்தான் தெரியும். ஆனால் சிவ பக்தனுக்கும் சிவனடியாருக்கும் சில வேறுபாடுகள் உள்ளன என்பதை உணர்ந்ததுண்டா

🕉️1)சிவனை கண்டதும் பனிபவன் பக்தன்.

சிவனுக்காக எதையும் செய்யத் துணிந்தவன் அடியார்.

🕉️2)சிவனை வணங்குபவர் பக்தன்.

சிவனை மட்டும் வணங்குபவர் அடியார்.

🕉️3)உடல் தூய்மையாக இருந்தால் மட்டுமே கோயிலுக்கு செல்பவர் பக்தன்.

உடலை ஒரு பொருட்டாக கருதாமல், மனத்தூய்மை வேண்டி கோயிலுக்கு செல்பவர் அடியார்.

🕉️4)அர்ச்சனை செய்வதற்காகக் கோயில் செல்பவர் பக்தன்.

ஈசனைப் போற்றிப் பாடி ஆனந்தமடைய கோயில் செல்பவர் அடியார்.

🕉️5)அறமல்ல சிவம் என்று உணராதவர் பக்தன்.

அன்பே சிவமென உணர்ந்தவர் அடியார்.

🕉️6)மறைக்குள்ளும் முறைக்குள்ளும் இருப்பவர் ஈசன் என்று நினைப்பவர் பக்தன்.

ஈசனை அடைய மனமும் மொழியும் தடையில்லை, ஆக மறையும் முறையும் எமக்கில்லை என்று நினைப்பவர் அடியார்.

🕉️7)கூட்டத்தோடு கூட்டமாக முண்டியடித்து இறைவனைக் காண்பவர் பக்தன். .

கூட்டம் போனபின் ஈசன் அழகைத் தனித்து நின்று ரசிப்பவர் அடியார்.

🕉️8) ஈசனை அடைய சுத்தமாக இருக்கவேண்டும் என நினைப்பவர் பக்தன்.

சுத்தத்தைப் பெரிதாக எண்ணாமல் சித்தத்தை சிவன்பால் வைப்பவர் அடியார்.

🕉️9) வாழ்வில் ஒரு பகுதியை வழிபாட்டுக்கு செலவு செய்பவர் பக்தன்..

வாழ்வையே வழிபாடாகக் கொண்டவர் அடியார்.

சிவபக்தனாக இருப்பதைவிட சிவனடியாராக இருப்பது மிக மிக சுலபம்.

சிவபக்தனுக்கு மறுபிறவி நிச்சயம். சிவனடியார்க்கு முக்தி நிச்சயம்…
என்றும் அன்புடன் வாழ்க்கை ஜோதிடர் P.A.முகுந்தன் முரளி பள்ளிபாளையம்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!