திசா நாதான் தரும் மறைமுக பலன்கள் ;
++++++++++++++++++++++++++++++++++++
–
ஒரு கிரகம் தனது திசையை நடத்தும் போது நன்மை செய்யுமா அல்லது தீமை செய்யுமா என்பதை கீழ் காணும் கணிதம் மூலம் தெரிந்து கொள்ளலாம் =
–
1- ஜாதகரின் ஜனன நட்சத்ரத்தை முதலில் கண்டறிய வேண்டும் =
=
2- பின் திசா நாதன் நின்ற நட்சத்ரத்தை கண்டுபிடிக்க வேண்டும் =
–
3 = ஜனன நட்சத்ரம் முதல் திசா நாதன் நின்ற நட்சத்ரம் வரை எண்ணி கணக்கிட வேண்டும்-
–
4 = எண்ணி வந்த தொகையை – 7 – ஆல் பெருக்கி – 8 – ஆல் வகுக்க வேண்டும்-
–
5- மீதி வரும் எண்ணுக்கு பலன் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது = இது அந்த ஜாதகருக்கு அந்த திசையில் நடக்கும் என்பது சாஸ்திர விதி-
–
6 = 7 ஆல் பெருக்கி 8 ஆல் வகுத்து மீதி வரும் எண் பூஜ்யம் என்றால் 8 இக்கு உண்டான பலன் படி நடக்கும் =
–
7 = இதன் படி எல்லா திசைக்கும் கணக்கிட்டுப் பார்க்க வேண்டும்-
–
8 = எல்லா திசைகளும் நன்மை தரும் படி இருந்தால் அது ஒரு ராஜ யோக ஜாதகமே-
–
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மீதி வரும் எண் 1 வந்தால் = ரோகம்
மீதி வரும் எண் 2 வந்தால் = லாபம்
மீதி வரும் எண் 3 வந்தால் = வழி நடைப் பயணம்
மீதி வரும் எண் 4 வந்தால் = அடிமைத் தொழில்கள்
மீதி வரும் எண் 5 வந்தால் = தன லாபம்
மீதி வரும் எண் 6 வந்தால் = ஐஸ்வர்யம்
மீதி வரும் எண் 7 வந்தால் = தன நஷ்டம்தான்
மீதி வரும் எண் 8 வந்தால் == வழக்கு வியாஜ்யம் தான்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
–
புத்தி நாதன் தரும் மறைமுகப் பலன்கள் –
++++++++++++++++++++++++++++++++++++
–
மீதி எண் 1 என வந்தால் = ரோகம்
மீதி எண் 2 என வந்தால் = லாபம்
மீதி எண் 3 என வந்தால் = வழி நடைப் பயணம்
மீதி எண் 4 என வந்தால் == அடிமைத் தொழில்கள்
மீதி எண் 5 என வந்தால் = தன லாபம்
மீதி எண் 6 என வந்தால் == ஐஸ்வரியம்
மீதி எண் 7 என வந்தால் = தன நஷ்டம்
மீதி எண் 8 என வந்தால் = வழக்கு வியாஜ்யம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1 = திசா நாதன் நின்ற நட்சத்ரம் முதல் புத்தி நாதன் நின்ற நட்சத்ரம் வரை எண்ணி ,கணக்கிட வேண்டும் =
–
2 = எண்ணி வந்த தொகையை 7 ஆல் பெருக்கி 8 ஆல் வகுக்க மீதி வரும் எண்ணுக்கு மேலே கண்ட பலன் பார்க்கவும்-
–
3 = திசா நாதனும் , புத்தி நாதனும் , யோகம் தரும் வகையில் அமைந்து இருந்தால் , அந்த காலத்தில்தான் நல்ல பலன்கள் நடைபெறும் == இது உத்தமம் ஆகும் =
–
4 = திசா நாதனும் , புத்தி நாதனும் , அசுப யோகம் தரும் வகையில்தான் அமைந்து இருந்தால் , அந்த காலத்தில்தான்
கெட்ட பலன்கள் நடைபெறும் = இது அசுபம் ஆகும் =
–
5 = திசா நாதன் யோகத்திலும் , புத்தி நாதன் அசுபத்திலும் இருந்தால் , அந்த புத்தி முடியும்வரை அசுப பலன்கள் நடக்கும்-
–
6 = திசா நாதன் அசுபத்திலும் , புத்தி நாதன் யோகத்திலும் , இருந்தால் , அந்த புத்தி முடிவதற்குள் நன்மை செய்வார்-
–
7 = மேலும் கோசார கிரககங்களின் நிலைகளையும் பார்க்கவும் ;
–
8 = திசா புக்தி என்பது == LONG PERIOD == நீண்ட கால பயணம் =
–
9 == புத்தி நாதன் என்பது = SHORT PERIOD = குறுகிய கால பயணம் ==
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
–
இதற்கு பரிகாரங்கள் :
–
அந்த கிரகங்களின் அதிதேவதைகள் , கிரகங்களின் கோவில்கள் , ஹோமம் , குலதெய்வ வழிபாடுகள் , இஷ்ட தெய்வ வழிபாடுகள் , அன்னதானம் , ஆடை தானம் , கோமாதா வழிபாடு , மகம் நட்சத்ரம் வரும் நாளில் , பசுவுக்கு அருகம்புல் , அகத்திக்கீரை , பழங்கள் , வெல்லம் பச்சரசி கலந்தது , அம்மாவசை வழிபாடு , முன்னோர்கள் வழிபாடு , தர்ப்பணம் , திதி , கொடுக்க நலம் உண்டாகும்