8.5 C
New York
Thursday, March 28, 2024

Buy now

spot_img

சந்திரன் அஷ்டவர்க்கம் தரும் பலன்

சந்திரன் அஷ்டவர்க்கம் தரும் பலன்

1. சந்திரன் வளர் பிறையாக இருந்து கேந்திர கோணங்களில் இருந்து குருவுடன் சம்பந்தம் பட்டு ஐந்து பிந்துக்களுடன் இருந்தாலே வாழ்க்கையில் உயர்நிலை பெறுவார்கள்.

2. சந்திரன் ஐந்தாம், அல்லது ஒன்பதாம் அதிபதியாகி, கேந்திர கோணங்களில் இருந்து, 5 பிந்துக்களுக்கு மேல் இருந்தாலே புகழ் பெறும் சாதனை படைப்பு அமைப்பாகும்.

3.சந்திரனின் அஷ்டவர்க்கத்தில் நாலு பிந்துக்களுடன் குறைவானால் தாய் நலம் பாதிக்கப்படும் தாயன்பு பெற இயலாது.

4.சந்திரனின் அஷ்டவர்க்கத்தில் ஐந்து பிந்துக்களுடன் இருந்தால் மன அமைதி பெறுவார், சற்று தைரியம் உடையவர்.

5.சந்திரனின் அஷ்டவர்க்கத்தில் சந்திரன் ஆறு பிந்துக்களுடன் இருந்தால் பெருமைக்குரியவர் ஆகவும் போற்றப்பட கூடியவராகவும் இருப்பார்.

6.சந்திரனின் அஷ்டவர்க்கத்தில் சந்திரன் 7 பிந்துக்களுடன் இருந்தால் ஜோதிடம் மந்திரம் இக் கலையில் தேர்ச்சி பெறுவார்.

7.சந்திரனின் அஷ்டவர்க்கத்தில் சந்திரன் 8 பிந்துக்களுடன் இருப்பது மந்திர சித்தி பெற்று உத்தமமாக விளங்குவார்.

8. சந்திரன் மூன்று பிந்துக்களுக்கு குறைவாக இருந்து பலமற்று இருந்தால் தாயாரை பிரிந்து இளமை காலத்திலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை மற்றும் விஷக்கடியால் ஆபத்து.

9.சந்திரனின் அஷ்டவர்க்கத்தில் லக்னத்திற்கு நாளில் சந்திரனுடைய பரல் 4 க்கு மேல் இருந்தால் வாழ்க்கை வாழ்வதற்கே மிகவும் மகிழ்ச்சியாகவும் நல்ல கல்வியும் சாத்வீக குணம் உடையவராக இருப்பார்.
🙏🌹🙏🌹🙏🌹🌹
ராமசுப்பிரமணியம் ஈரோடு
ஜோதிட மாணவன்
🙏🌹🌹🌹🌹🌹🌹

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!